ஜெயலலிதாவ காப்பாத்தி இருக்கலாம்.. சசிகலாவை மீண்டும் விசாரிக்கணும்! ரூட்டை மாற்றும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், அளித்த சிகிச்சை குறித்தும் அறிவிக்கப்படவில்லை உரியஅறுவை சிகிச்சை செய்திருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டசபை கூட்டத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில் சில அறிவுரைகளை ஏற்றிருந்தால் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என குறிப்பிட்டிருக்கிறது. இதில் சசிகலா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாலர் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம்
குறிப்பாக பல குற்றச்சாட்டுகள் சசிகலாவை குறிவைத்தே இருக்கின்றன. சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை எனவும், சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சசிகலா
மேலும், சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை காரணமாக சசிகலாவுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே அவர் தான் என்பது போல அறிக்கை இருப்பதாக ஜெ.ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

கோவை செல்வராஜ்
இந்நிலையில் உரியஅறுவை சிகிச்சை செய்திருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறியுள்ளார். சென்னை பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்," தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். துப்பாக்கிச்சூடு பற்றி தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று பழனிசாமி பொய் கூறியுள்ளார்.

சசிகலா மீது விசாரணை
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, விஜயபாஸ்கர் மீது விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், அளித்த சிகிச்சை குறித்தும் அறிவிக்கப்படவில்லை. உரியஅறுவை சிகிச்சை செய்திருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம்" என்றார்.
-
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications