காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது... 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - வானிலை மையம்
வட தமிழகம் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வட தமிழகம் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகம் மற்றும் ஆந்திராவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆறுகளில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொன்னையாற்றில் 65,000 கன அடி தண்ணீர் நீர்வரத்தும், பாலாற்றில் 42,500 கன நீர் வரத்தும் ஏற்பட்டுள்ளதால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து பாலாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிளை ஆறுகளில் பாயும் வெள்ளமும் பாலாற்றில் கலக்கத்தொடங்கியுள்ளது. 90 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு லட்சம் கன அடி நீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக பாலாற்றில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 10 நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி ஆற்றில் நீர் கலந்து ஒருவித காரணத்தினாலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் கனம் முதல் மிக கனமழை ஓரிரு இடங்களில் அதிகன மழையும் பதிவாகியுள்ளது அதிக மழை ஐந்து இடங்களிலும் மிக கனமழை முப்பத்தி ஏழு இடங்களிலும் கனமழை அறுபத்தி ஆறு இடங்களிலும் பதிவாகியுள்ளது அதிகபட்ச மழை அளவாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோலியனூர் வல்லம் வளவனூர் மன பூண்டி ஆகிய பகுதிகளில் அதி கனமழையாக 22 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், கோலியனூர், வல்லம், வளவனூரில் தலா 22 செமீ மழை பதிவாகியுள்ளது. மணம்பூண்டியில் 21 செமீ மழையும், முகையூரில் 20 செமீ மழையும் பதிவாகியுள்ளது. புதுச்சேரி, ஆனந்தபுரம் வெங்கூரில் தலா 19 செமீ மழை பதிவாகியுள்ளது. மரக்காணத்தில் 18 செமீ மழையும் திருவண்ணாமலையில் 15 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

இடி மின்னலுடன் கனமழை
வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுவதன் காரணமாக இன்றைய தினம் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புவியரசன், ஈரோடு சேலம் தர்மபுரி வேலூர் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் வடமாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

கடலூர், டெல்டாவில் கனமழை
நாளைய தினம், நீலகிரி நீலகிரி ஈரோடு கிருஷ்ணகிரி சேலம் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஞாயிறன்று அரியலூர் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி கடலூர் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான மழை
2, 23ஆம் தேதிகளில் தென் மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கவனம்
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் வட தமிழக கடலோரம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இன்று மாலை நான்கு மணி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications