15ம் தேதி வானத்தை தெறிக்க விடப் போகும் சந்திராயன் 2.. இந்தத் தடவை இதெல்லாம் புதுசு கண்ணா புதுசு!
நிலவை பற்றி ஆராய்ச்சி செய்யும் சந்திராயன் 2 விண்கலம் 15ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
சென்னை: நிலவை பற்றி ஆராய்ச்சி செய்யும் சந்திராயன் 2 விண்கலம் 15ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ஆனால், சந்திராயன் 1க்கும், 2க்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.
சந்திராயன்-2 விண்கலம் வரும் 15-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்ரோ இதற்கு முன்னர் அனுப்பிய சந்திராயன் 1க்கும், தற்போது அனுப்ப உள்ள சந்திராயன் இரண்டுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.

ரோபோ ரோவர்:
சந்திராயன் 1 விண்கலம் நிலவில் தரையிறங்கவில்லை. ஆனால் சந்திராயன் 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு ரோபோ ரோவர் கருவியை அனுப்பி நிலவை சுற்றிவந்து ஆராய்ச்சி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது சந்திராயன் 2.

எடையில் வேறுபாடு:
சந்திராயன் 1ன் மொத்த எடை 1380 கிலோ தான். ஆனால் சந்திராயன் 2ன் மொத்த எடை 3290 கிலோ. எனவே இதனை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

விக்ரம்:
சந்திராயன் 1 விண்கலம் நிலவில் இருந்து ஒரு குறிப்பட்ட தூரத்தில் இருந்தபடி தான் ஆய்வுகளை மேற்கொண்டது. ஆனால் சந்திராயன் 2, நிலவை சுற்றி வந்தும், அதில் தரையிறங்கியும் முழுமையாக ஆய்வு செய்யும். அதற்காக விக்ரம் எனும் தரையிறங்கும் கருவியும், பிரக்யான் எனும் ரோவர் கருவியும் அதில் பொருத்தப்பட்டுள்ளது.

உலக சாதனை:
மேலும், சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதிக்குச் செல்லும். இதற்கு முன்னர் வேறு எந்த நாடும் அந்த பகுதிக்கு விண்கலத்தை அனுப்பியதில்லை. எனவே இது ஒரு உலக சாதனையாக கருதப்படும். சந்திராயன் 2 விண்கலத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications