விஜயகாந்த் கைகளுக்கு முத்தமிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்! கூடவே மகிழ்ச்சியான செய்தியையும் சொன்ன விஜய் தந்தை
சென்னை: விஜயகாந்த் விரைவில் பழைய நிலைமைக்கு திரும்புவார் என நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் விஜயகாந்தை வைத்து நிறைய படங்களை இயக்கியுள்ளார். சட்டம் ஒரு இருட்டறை, செந்தூரபாண்டி, வசந்தராகம், சட்டம் ஒரு விளையாட்டு, குடும்பம், நீதியின் மறுபக்கம், சாட்சி, புதுயுகம், ஓம் சக்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரஜினி, கமல் என உச்ச நட்சத்திரங்களுக்கு மத்தியில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தவர் விஜயகாந்த். எஸ்ஏ சந்திரசேகரின் இயக்கத்தில் விஜயகாந்த் 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தனது நடிப்புத் திறமையால் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
நானும் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு இருக்கிறேன்.. விஜயகாந்த் பற்றி உருக்கமாக பேசிய
விஜயகாந்த்
அது போல் விஜயகாந்த் நடித்த பெரும்பாலான படங்களில் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்த போது பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்க கடனை கலை நிகழ்ச்சிகளை நடத்தி அடைத்தார்.
தேமுதிக
அது மட்டுமல்லாமல் நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த விஜயகாந்த் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். அண்மையில் அவருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவர் அரசியலில் நேரடியாக ஈடுபடாமல் உள்ளார்.
தேமுதிகவில் இணைந்த ரசிகர்கள்
விஜயகாந்தால் தேமுதிகவில் இணைந்தவர்கள் எல்லாம் தற்போது அவரது நிலையை கண்டு மனம் வேதனை அடைகிறார்கள். அவர் விரைவில் குணமடைந்து பழைய நிலைக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த நிலையில் விஜயகாந்த்- பிரேமலதா நேற்று முன் தினம் தங்களது 33 ஆவது திருமண ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.
திருமண நாள்
திருமண நாளில் வாழ்த்து கூறுவதற்காக சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சென்றார். அங்கு விஜயகாந்துக்கும் அவருடைய மனைவி பிரேமலதாவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். விஜயகாந்த் ஊதா நிற சட்டை, பட்டு வேட்டியில் இருந்தார். எஸ்.ஏ. சந்திரசேகர் விஜயகாந்தின் கைகளுக்கு முத்தம் கொடுத்தார்.
புகைப்படங்கள்
இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஒன்றரை ஆண்டுளுக்கு பிறகு விஜயகாந்தை நேரில் சந்திக்கிறேன். அவர் நலமாக உள்ளார். அவரை பார்த்தவுடன் எனக்கு பழைய நினைவுகள் மலர்ந்தன.
பெரிய எனர்ஜி
எனக்கு ஒரு பெரிய எனர்ஜி கிடைத்தது போல் உள்ளது. விரைவில் அவர் பழைய நிலைமைக்கு வந்துவிடுவார் என நம்புகிறேன். விஜய் என்றாலே வெற்றிதானே. விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது தொண்டர்களுக்கு மன மகிழ்ச்சி அடைந்தனர். புதுதெம்புடன் தொண்டர்கள் இடைத்தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அது போல் நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக புத்துணர்ச்சியுடன் போட்டியிடும் என்றே தெரிகிறது.
விஜிக்கு புத்தாண்டு வாழ்த்துகள் சொன்ன சத்யராஜ்
விஜயகாந்தை கடந்த புத்தாண்டு அன்று நடிகர் சத்யராஜ் சந்தித்தார். விஜயகாந்த் கதாநாயகன் ஆவதற்கு முன்பே சட்டம் ஒரு இருட்டறை, நூறாவது நாள் உள்ளிட்ட படங்களில் சத்யராஜ் வில்லனாக நடித்திருந்தார். இருவருக்கும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு இருந்து வருகிறது. விஜயகாந்தை ரஜினி, கமல், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் விஜி என்றுதான் அன்போடு அழைப்பார்களாம். அது போல் விஜயகாந்தின் பிறந்தநாளன்று நடிகர் கார்த்தி நேரில் சந்தித்தார். ஒரு முறை ரஜினிகாந்த் விஜயகாந்தை நேரில் சந்தித்து மகிழ்ந்தார். அவ்வப்போது விஜயகாந்த் தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். கடந்த 1 ஆம் தேதி புதிய இரண்டு 100 ரூபாய் தாள்களை தன்னை பார்க்க வந்த ரசிகர்களுக்கு வழங்கினார்.