திமுக கூட்டணியில் இணையும் தேமுதிக? என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்காததற்கு இதுவே காரணம்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் தேமுதிக முதல்முறையாக திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதிமுகவுடன் பிரேமலதா விஜயகாந்த் பேசி வந்தாலும், அவர்களின் பேச்சுவார்த்தை முடிந்திருந்தால் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருப்பார். ஆனால் திமுக பக்கம் செல்ல பிரேமலதா விரும்புவதால், இன்றைய பொதுக்கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், என்டிஏ கூட்டணியின் முதல் கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி, டிடிவி தினகரன், ஜிகே வாசன், ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், பூவை ஜெகன்மூர்த்தி, பாரிவேந்தர் உள்ளிட்டோட் பங்கேற்றனர். ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக மற்றும் பாஜக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அவர்கள் கொஞ்சம் கூட பிடிகொடுக்கவில்லை என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணி பக்கம் சாய்வதாக விவரம் அறிந்தவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
தேமுதிக திமுக கூட்டணி பக்கம் சென்றதற்கு ராஜ்ய சபா சீட் விவகாரம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதனால் ஏற்பட்ட அதிருப்தியே திமுக உடனான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. இதன்பின் திமுகவுடன் விஜயகாந்திற்கு இருந்த நெருக்கம் தொடர்பாக பேச தொடங்கினார்கள். அதேபோல் விஜயகாந்த் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு திமுகவினரை அழைக்க தொடங்கினர்.
இதுதான் தேமுதிக கூட்டணிக்கு கொடுத்த சிக்னலாக அமைந்தது. இருந்தாலும் தேமுதிக இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல் தேமுதிகவுடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருந்தால், என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றிருப்பார். ஆனால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால், அவர்கள் பங்கேற்கவில்லை.
இதனால் திமுகவுக்கு ஒரு சாய்ஸாக தேமுதிக உள்ளது. திமுகவுக்கு தேமுதிக மட்டுமல்லாமல், ராமதாஸ் தலைமையிலான பாமகவும் உள்ளது. ஆனால் ராமதாஸ் விவகாரத்தில் விசிக முட்டுக்கட்டையாக உள்ளது. இதனால் தேமுதிக அல்லது ராமதாஸ் பாமக அணி இரண்டில் ஒன்றை திமுக கூட்டணிக்குள் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது.
என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் தேமுதிக பங்கேற்காததன் மூலமாகவே, அவர்கள் திமுகவுடன் கூடுதலாக பேசி வருகிறார்கள் என்றும் விவரம் அறிந்தவர்கள் பேசி வருகின்றனர். மேலும், தேமுதிக இரட்டை இலக்கத்தில் கேட்டு வருவதாகவும், அதனை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து ஒற்றை இலக்கத்தில் கொண்டு வர திமுக முயற்சித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications