அந்த "ஒரே" வார்த்தைதான்.. ஜெர்க் ஆகி.. எகிறி யூடர்ன் அடித்த தேமுதிக.. மீண்டும் பேச்சுவார்த்தையா?
தேமுதிக தினகரனுடன் மறுபடியும் பேச்சுவார்த்தை நடத்தும் என்கிறார்கள்
சென்னை: அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மீண்டும் அக்கட்சியுடனேயே பேச்சுவார்த்தையை தொடரலாமா என்று தேமுதிக யோசித்து வருகிறதாம்... இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை எடுபடவில்லை.. பலமுறை அமைச்சர்கள் பேச்சு நடத்திய நிலையில், 13 சீட்கள் + ராஜ்ய சபா சீட் தர அதிமுக முன்வந்தது..!
ஆனால், கூடுதல் சீட்டுகளுடன் தேர்தல் நிதியும் வேண்டும் என்று கேட்கவும், அத்துடன் பேச்சுவார்த்தையை அதிமுக நிறுத்தி கொண்டது.

பேச்சுவார்த்தை
பிறகு கூட்டணியில் இருந்து விலகி, அமமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது தேமுதிக.. அங்கும் 32 சீட் வரை ஓகே ஆன நிலையில், தேர்தல் செலவுக்கு பணம் தர மறுத்துள்ளதாக தெரிகிறது.. அதனாலேயே 3 நாட்கள் நடந்த பேச்சுவார்த்தையும் அப்படியே நின்றுவிட்டது. இதில் தேமுதிகவை கொண்டு வர தினகரன் தரப்பு பெரும் முயற்சி எடுத்ததையும் சொல்ல வேண்டி உள்ளது.

லிஸ்ட் வெளியீடு
இதனிடையே, அமமுகவும் தன்னுடைய 3-ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்டை நேற்று மாலை அறிவித்துவிட்டது.. அதாவது இதுவரை 195 பேர் வேட்பாளர்களாக அந்த கட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.. ஒவைசி கட்சிக்கு 3 சீட், எஸ்டிபிஐ கட்சிக்கு 6 சீட், கோகுல மக்கள் கட்சி, மருது சேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மக்களரசு கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள், என மொத்தம் 208 தொகுதிகளுக்கும் லிஸ்ட் வெளியாகியாயிற்று.

சீட்
அதனால்தான், தேமுதிகவுக்கு சீட் தரும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஒருவேளை முன்கூட்டியே கூட்டணி முடிவாகி இருந்தால், சீட்டுக்களும் கணிசமாக தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

சுதீஷ்
அதுமட்டுமல்ல, பேச்சுவார்த்தையின்போது, முதல்வர் வேட்பாளர் விவகாரமும் வெடித்துள்ளதாக தெரிகிறது.. "முதல்வர் விஜயகாந்த்" என்று சுதீஷ் அன்றைக்கு ட்வீட் போட்டிருந்த நிலையில், முதல்வர் வேட்பாளராக தினகரனை ஏற்றுக்கொள்வதிலும் தேமுதிகவுக்கு தயக்கம் உள்ளதாம்.. எனினும், தனித்து போட்டியிடவும் முடியாமல், கூட்டணிகள் யாருமே ஒப்புக் கொள்ளாமலும் தேமுதிக திணறி வருவதாக தெரிகிறது.. இதனால் மறுபடியும் அமமுகவுடனேயே பேச்சுவார்த்தையை தொடங்கலாமா என்ற யோசனையிலும் உள்ளதாம்..

கமல்
அப்படியே பேசினாலும், 208 தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், தேமுதிகவுக்கு எத்தனை சீட் தர முடியும் என்பதும் கேள்விக்குறிதான். திமுகவில் 10 சீட் வரை தர முன்வந்திருக்கிறார்கள்.. ஆனால் தேர்தல் செலவு என்று பேச்செடுக்கவும்தான், அங்கு கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.. பிறகு, கமலிடம் கூட பேச்சை ஆரம்பித்தார்களாம்.. "தேர்தல் செலவுக்கு எங்களுக்கு எவ்வளவு தர போகிறீர்கள்" என்று மய்யத்தில் கேட்கவும், அப்படியே யூடர்ன் போட்டு திரும்பி வந்துவிட்டதாம் தேமுதிக..!
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications