ஒரு சீட் போதாது.. திமுக எங்களுக்கான மரியாதையை கொடுக்கணும்.. வேல்முருகன் சொன்ன முக்கிய விஷயம்!
சென்னை: ஒரேயொரு தொகுதியை மட்டும் பெற்றுக் கொண்டு இந்த சட்டசபைத் தேர்தலை சந்திக்கக் கூடாது என்பதே தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளின் பெரும்பான்மை கருத்தாக உள்ளது என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார். எங்களுக்கு உரிய மரியாதையை திமுக வழங்க வேண்டும் என்று கூறிய வேல்முருகன், ஒருவேளை திமுக மறுத்தால் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
2021 சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழக வாழ்வுரிமை கட்சி இடம்பெற்று, பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. தவாக சார்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சட்டசபைத் தொகுதியில் தவாகவுக்கு மீண்டும் அதே கணக்கில் தொகுதி ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு தவாகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தவாக தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற முடியாது. அதனால் நாங்கள் ஏற்கனவே ஒரு தெளிவான முடிவை எடுத்து திமுக தலைமையிலான கூட்டணியில் பயணித்து வருகிறோம்.
கடந்த 4 நாட்களாக தவாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனையில் தவாகவில் இணைந்தவர்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்க தர வேண்டும் என்று பேசப்பட்டது. அதனால் திமுக தலைமையிலான கூட்டணியில் கூடுதல் இடங்களை பெற்று, தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற கருத்தை என்னிடம் கூறியுள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் தவாக பொதுக்குழு நடக்கவுள்ளது.
இந்த நிமிடம் வரை தவாக திமுக தலைமையிலான கூட்டணியில் தான் உள்ளது. பாமகவின் அன்புமணி பிரிவு அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் ராமதாஸ் தரப்பு பாமகவும், திமுக அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு இல்லை என்கிற போது, முக்கிய சமுதாயத்தின் பிரதிநிதியாக நான் இருக்கிறேன். தமிழ் தேசிய அரசியலை பேசக் கூடிய கட்சியாக தவாக உள்ளது.
அதனால் எங்களுக்கு உரிய மரியாதையை திமுக வழங்க வேண்டும் என்பது தான் இந்த 4 நாட்களாக நடக்கும் கூட்டத்தின் ஒற்றை கோரிக்கை. இதனை திமுகவும், முதல்வர் ஸ்டாலினும் நிச்சயம் பரிசீலனை செய்வார்கள் என்று நம்புகிறேன். ஒரு இடத்தை பெற்றுக் கொண்டு தேர்தலை சந்திக்கக் கூடாது என்பதுதான் கட்சியின் பெரும்பான்மை மக்களின் கருத்து.
திமுக எங்களிடம் இதுவரை அப்படி சொல்லவில்லை. ஒருவேளை அப்படி கூறினால், கட்சியின் பொதுக்குழுவை கூட்டி உரிய முடிவுகளை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார். வடமாவட்டங்களில் விஜய்யின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கருதப்படும் சூழலில், தவாகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படுமா என்ற கேள்வி பல்வேறு தரப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.
-
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ஸ்பெஷல் ஐட்டம்.. வில்லிவாக்கத்தில் களமிறங்கும் சபரீசனின் வலதுகரம் -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு












Click it and Unblock the Notifications