ஒரு சீட் போதாது.. திமுக எங்களுக்கான மரியாதையை கொடுக்கணும்.. வேல்முருகன் சொன்ன முக்கிய விஷயம்!
சென்னை: ஒரேயொரு தொகுதியை மட்டும் பெற்றுக் கொண்டு இந்த சட்டசபைத் தேர்தலை சந்திக்கக் கூடாது என்பதே தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளின் பெரும்பான்மை கருத்தாக உள்ளது என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார். எங்களுக்கு உரிய மரியாதையை திமுக வழங்க வேண்டும் என்று கூறிய வேல்முருகன், ஒருவேளை திமுக மறுத்தால் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
2021 சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழக வாழ்வுரிமை கட்சி இடம்பெற்று, பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. தவாக சார்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சட்டசபைத் தொகுதியில் தவாகவுக்கு மீண்டும் அதே கணக்கில் தொகுதி ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு தவாகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தவாக தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற முடியாது. அதனால் நாங்கள் ஏற்கனவே ஒரு தெளிவான முடிவை எடுத்து திமுக தலைமையிலான கூட்டணியில் பயணித்து வருகிறோம்.
கடந்த 4 நாட்களாக தவாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனையில் தவாகவில் இணைந்தவர்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்க தர வேண்டும் என்று பேசப்பட்டது. அதனால் திமுக தலைமையிலான கூட்டணியில் கூடுதல் இடங்களை பெற்று, தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற கருத்தை என்னிடம் கூறியுள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் தவாக பொதுக்குழு நடக்கவுள்ளது.
இந்த நிமிடம் வரை தவாக திமுக தலைமையிலான கூட்டணியில் தான் உள்ளது. பாமகவின் அன்புமணி பிரிவு அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் ராமதாஸ் தரப்பு பாமகவும், திமுக அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு இல்லை என்கிற போது, முக்கிய சமுதாயத்தின் பிரதிநிதியாக நான் இருக்கிறேன். தமிழ் தேசிய அரசியலை பேசக் கூடிய கட்சியாக தவாக உள்ளது.
அதனால் எங்களுக்கு உரிய மரியாதையை திமுக வழங்க வேண்டும் என்பது தான் இந்த 4 நாட்களாக நடக்கும் கூட்டத்தின் ஒற்றை கோரிக்கை. இதனை திமுகவும், முதல்வர் ஸ்டாலினும் நிச்சயம் பரிசீலனை செய்வார்கள் என்று நம்புகிறேன். ஒரு இடத்தை பெற்றுக் கொண்டு தேர்தலை சந்திக்கக் கூடாது என்பதுதான் கட்சியின் பெரும்பான்மை மக்களின் கருத்து.
திமுக எங்களிடம் இதுவரை அப்படி சொல்லவில்லை. ஒருவேளை அப்படி கூறினால், கட்சியின் பொதுக்குழுவை கூட்டி உரிய முடிவுகளை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார். வடமாவட்டங்களில் விஜய்யின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கருதப்படும் சூழலில், தவாகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படுமா என்ற கேள்வி பல்வேறு தரப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.
-
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தூத்துக்குடிக்கு வர இருந்த கப்பல் முதலீடு! கண்டுக்காத தமிழக அரசால்..ஆந்திரா போன மசகான் டாக் நிறுவனம் -
சாதனையா? வேதனையா? விஜய் முதல்வராகி 30 நாள்! அதிரடி ஆக்ஷன்களும்.. அரசின் முன் நிற்கும் சவால்களும்! -
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம் -
தவெக வெற்றியைத் தொடர்ந்து.. தேசிய அளவில் காங்கிரஸுக்கு வியூகம் வகுக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி! -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி!












Click it and Unblock the Notifications