Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’பாரம்பரிய பத்திரிகைகள்’ ஆசையில் மண் விழுந்துருச்சே! பொதுக்குழுவில் சீண்டிய ஸ்டாலின்! பரபர பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக உட்கட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ள நிலையில், 'திமுகவின் வன்முறைக் கலாச்சாரத்தை' என்று எழுதலாம் என்று துடித்த சில பாரம்பரிய பத்திரிக்கைகளின் ஆசையில் மண் விழந்துள்ளதாக திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது உட்கட்சி பொதுத் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் ஒன்றிய, நகர ,பேரூர் மற்றும் பகுதி கழக செயலாளர் மாவட்ட, மாநகர கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களுக்கும் வேட்பு மனு தாக்கல் ஏழாம் தேதி வழங்கப்பட்டது. அப்போது திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.

திமுக பொதுக்குழு கூட்டம்

திமுக பொதுக்குழு கூட்டம்

இந்நிலையில் திமுக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்ஸ் கான்வென்சன் சென்டரில் நடைபெற்றது.திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆற்காடு வீராசாமி தேர்தல் நடத்தும் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில் தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாததால் இரண்டாவது முறையாக திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

உட்கட்சி மோதல்

உட்கட்சி மோதல்


முன்னதாக திமுகவில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் பல மாவட்டங்களில் மோதல் ஏற்பட்டது சில இடங்களில் அடிதடி வரை சென்றது. திருச்சி ராமநாதபுரம் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்வாகிகள் வெளிப்படையாகவே மோதல் போக்கை கையாண்டனர். இன்னிலையில் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் விவகாரங்களை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாகவே பேசினார்.

அமைதியாக தேர்தல்கள்

அமைதியாக தேர்தல்கள்

நிகழ்ச்சியில் பேசிய அவர்,"அமைதியாக தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. தலைமைக் கழகத்தின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு- தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதல் படி- கிளைக் கழகம் முதல் பகுதிக் கழகம் வரையிலான தேர்தல்களை அமைதியாக நடத்திய தலைமைக் கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவர்க்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில இடங்களில் வாக்குவாதங்கள்- மனவருத்தங்கள் இருந்தாலும்- அதனை அமைதியாகச் சமாளித்து தேர்தலை நடத்தி முடித்து தலைமைக்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள்.

பாரம்பரிய பத்திரிக்கைகள்

பாரம்பரிய பத்திரிக்கைகள்

பார்த்தீர்களா... தி.மு.க.வின் வன்முறைக் கலாச்சாரத்தை!" என்று எழுதலாம் என்று துடித்த சில பாரம்பரிய பத்திரிக்கைகளின் ஆசையில் மண் விழ - நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர்களின் பதவிப் போட்டிகள் சுமுகமாக முடிந்தன. உடனே, 'தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை' என்று எழுதத் தொடங்கி விட்டார்கள். என்னை விட - உங்களை விட - இந்த நாட்டில் சில பத்திரிக்கைகள் அதிகப்படியான தி.மு.க. பாசம் கொண்டு செயல்படுவதைப் பார்த்து இதைப் படிப்பவர்கள்தான் பாவம், தலைசுற்றிக் கீழே விழுவார்கள் " என கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+