திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிர்பார்த்த இடங்கள் தரவில்லை- திருமாவளவன் பரபர பேட்டி
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் நாங்கள் எதிர்பார்த்த அளவு இடங்கள் கிடைக்கவில்லை என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து உயிரிழந்த வேலூர்மாவட்டம் காட்பாடி மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார் திருமாவளவன்.
தற்கொலை செய்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தினார் திருமாவளவன்.

மைனஸ் மார்க்
பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீட் தேர்வில் உள்ள மைனஸ் மார்க் எனப்படுவது மாணவர்களை அச்சுறுத்துகிறது. காட்பாடி மாணவி சௌந்தர்யா தேர்வில் தோல்வி அடைவோம் என தெரிய வந்ததால் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். பயிற்சிக்கு சென்று பயின்ற, மாணவி தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளது வேதனைக்குரியது.

தமிழக ஆளுநர்
மாணவியை நீட் காவு கொடுத்துவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் விரைந்து குடியரசு தலைவர் பார்வைக்கு அனுப்ப வேண்டும். இந்திய அரசு குடியரசு தலைவர் முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும்.

இடைவெளி எங்கே வருகிறது
ஏற்கனவே அதிமுக ஆட்சியிலும் மசோதா கிடப்பில் போடப்பட்டது. கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்புற மாணவர்களுக்குமான இடைவெளி.. தமிழ் வழி மாணவர்கள், ஆங்கில வழிமாணவர்கள் என்ற முரண்பாடு.. பயிற்சிக்கு செல்லும் மாணவர்கள், செல்லாத மாணவர்கள்.. இப்படிபட்ட இடைவெளிகளால் தான் நீட் தேர்வில் பிரச்சணை ஏற்படுகிறது.

குடியரசு தலைவர்
அரசு பள்ளி மாணவர்கள் போட்டி போடமுடியவில்லை. சிறப்பு விதிவிலக்காக, நீட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும். திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் சமூக நீதி மாநாடு நடத்தி முதல்வர் பங்கேற்கும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதற்கெல்லாம் இடம் அளிக்காத வகையில் குடியரசு தலைவர் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் குடும்பங்களுக்கும் அரசின் சார்பில் நிதி அளிக்க வேண்டும். மாநில அரசின் சட்டத்தை குடியரசு தலைவர் அங்கீகரிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளான திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகளும் ஒருமித்த கருத்துகளை சொல்ல வேண்டும்.

எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை
திமுக கூட்டணியில் எல்லா கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் இடம் ஒதுக்க வேண்டும். இவைகளை அளவுகோலாக கொண்டு பேச்சுவார்த்தை நடக்கிறது. எதிர்பார்த்த அளவு இடங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. நல்லிணக்கமான பேச்சுவார்த்தை ஆறுதல் அளிக்கிறது. தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என கூறினார்.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications