எடப்பாடி பழனிச்சாமி கோட்டையான சேலத்தில் கோட்டை விட்ட அதிமுக.. கொடி நாட்டிய திமுக! ஈரோட்டிலும் அபாரம்
சென்னை: சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் இந்த பகுதிகளில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக இருந்த 10 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகள், 23 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய 9வது வார்டு கவுன்சிலர் பதவி, மாவட்டப் பஞ்சாயத்து 10வது வார்டு கவுன்சிலர் பதவி ஆகியவற்றுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
24 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், 91 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

திமுக வெற்றி
சேலம் மாவட்ட ஊராட்சி 10வது வார்டு உறுப்பினர் மற்றும் பனமரத்துப்பட்டி ஒன்றியம் 9வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 9ம் தேதி தேர்தல் நடந்தது. தி.மு.க. சார்பில் சண்முகம், அ.தி.மு.க. சார்பில் எம்.ஆர்.முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் பெ.பழனிசாமி, தே.மு.தி.க. சார்பில் சிவலிங்கம், அ.ம.மு.க.சார்பில் மு.மணிகண்டன் உள்பட 11 பேர் களத்தில் போட்டியிட்டனர். தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது. தி.மு.க. வேட்பாளர் சண்முகம், அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர். முருகனை விட 10 ஆயிரத்து 472 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றார்.

பனமரத்துப் பட்டி
பனமரத்துப்பட்டி ஒன்றியம் 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் சுரேஷ்குமார், அ.தி.மு.க. சார்பில் மாணிக்கம் உள்பட 5 பேர் போட்டியிட்டனர். திமுக வேட்பாளர் சுரேஷ்குமார் 2,993 வாக்குகளை பெற்று வென்றார். சுயேச்சை வேட்பாளர் தேவி குமார் 1,222 வாக்குகள், அதிமுக வேட்பாளர் மாணிக்கம் 320 வாக்குகள் பெற்றனர்.

எடப்பாடி ஒன்றியம்
எடப்பாடி ஒன்றிய பகுதியில் தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சித்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர், பதவிகளுக்கான இடை தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள், எடப்பாடி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று காலை எண்ணப்பட்டது. தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் வளர்மதி வேலு 2004 வாக்குகளைப் பெற்றார், இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளரான அரசி மாதையன் 1912 வாக்குகளைப் பெற்றார். வளர்மதி வேலு 92 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தல் ஏன்
கடந்த முறை நடந்த மாவட்ட ஊராட்சி 10வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த மணி வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் அவர் ஓமலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றதால் அந்த இடம் காலியானது. தற்போது அந்த உறுப்பினர் பதவியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.தி.மு.க வேட்பாளர் சுரேஷ்குமார் 2,993 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மாணிக்கத்திற்கு 320 வாக்குகள் கிடைத்தது.

ஈரோடு
இதேபோல ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருந்த 20 ஊரக, உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடந்த தேர்தலில், 70. 22 சதவீதம் பேர் வாக்களித்த நிலையில், 9 மையங்களில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு எண் 5ல், திமுக வேட்பாளர் ஜெ.சதாசிவமும், ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 4வது வார்டு தேர்தலில் திமுக வேட்பாளர்கள் கே.வி.விவேகானந்தனும், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 10ல், செந்தில்குமாரும் வெற்றி பெற்றனர்.

ஈரோடு அதிமுக வியூகம்
ஈரோடு மாநகர் மாவட்டம் மற்றும் ஈரோடு புறநகர் மாவட்டம் என நிர்வாக வசதிக்காக அதிமுக இரு மாவட்டங்களாக சமீபத்தில் பிரித்தது. ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக கே.வி.ராமலிங்கம் பொறுப்பு வகிக்கிறார். புறநகர் மாவட்ட செயலாளராக கே.சி.கருப்பண்ணன் பொறுப்பு வகித்தார். ஆனால் இதில் புறநகர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, அதிமுக ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் என்ற பெயரில் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதற்கு கேஏ செங்கோட்டையன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் என்ற பெயரில் உருவாகியுள்ள மாவட்டத்திற்கு கேசி கருப்பண்ணன் செயலாளர் பதவியில் தொடர்கிறார். சீனியரான செங்கோட்டையனிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதன் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவை வலுப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் அது இந்த தேர்தலில் நடக்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி கோட்டை
சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடிதான், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊராகும். ஆனால் அந்த மாவட்டத்திலும் திமுக வெற்றிக் கொடியை நாட்டியுள்ளது. 6 மாதங்கள் முன்பு வரை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு, இப்போது, செல்வாக்கு குறைந்து விட்டதா, அதிலும் சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கு குறைந்து விட்டதா என்ற கேள்விகளை இந்த ரிசல்ட் எழுப்புகிறது.
-
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி!












Click it and Unblock the Notifications