போலீஸ் சொல்றதை அப்படியே நம்பாதீங்க.. எச்சரிக்கையாக இருங்க.. கள்ளக்குறிச்சி நீதிபதிக்கு ஹைகோர்ட் அட்வைஸ்
சென்னை: குற்ற வழக்குகளின் போது போலீசார் சொல்வதையும், குற்றவியல் வழக்கறிஞர்கள் சொல்வதையும் அப்படியே நம்பாதீர்கள் என்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிபதிக்கு சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதேபோல் நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவித்து, தவறாக வழிநடத்திய போலீசாருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி பாலா. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் லட்சுமி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- எஸ் செல்லம்பட்டு பஞ்சாயத்து தலைவி அறிவழகி என்பவரும், அவரது கணவரும், எனது நிலத்தை அபகரிக்கும் எண்ணத்தோடு என்னையும் என் மகனையும் வீடுபுகுந்து தாக்கினார்கள். இதில் நான் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

நீதிபதி நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
அப்போது இது குறித்து போலீசில் புகார் செய்திருந்தேன். ஆனால் சங்கராபுரம் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நான் கடந்த 9 ஆம் தேதி தான் டிஸ்சார்ஜ் ஆனேன். ஆனால் போலீஸ் தரப்பில் கடந்த 3 ஆம் தேதி 'டிஸ்சார்ஜ்' ஆனதாக கூறியதை ஏற்று, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி முன் ஜாமீன் வழங்கிவிட்டார்.
எனவே இந்த வழக்கை உள்ளூர் போலீசார் விசாரித்தார்கள் என்றால் சரியாக இருக்காது. எனவே இந்த வழக்கை வேறு ஒரு புலன்விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டு நீதிபதியை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
ஏன் இவ்வளவு அவசரம்?
இதையடுத்து இந்த வழக்கானது நேற்று நீதிபதி பி.வேல்முருகன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி பி வேல்முருகன், "முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஏன் இவ்வளவு அவசரம்?, போலீஸ் தரப்பில் கூறப்பட்டதை அப்படியே ஏற்று முன்ஜாமீன் வழங்கிவிட்டீர்களா?..
போலீசார் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான மனுவை சரி பார்த்தீர்களா? ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ் சம்மரி' ஆவணத்தை வாங்கி பார்த்தீர்களா?. குற்ற வழக்குகளின் போது போலீசார் சொல்வதையும், குற்றவியல் வழக்கறிஞர்கள் சொல்வதையும் அப்படியே நம்பிவிடாதீங்க.. நாம்தான் (நீதிபதிகள்) எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என்று கருத்து தெரிவித்தார். பின்னர், இது போன்ற குற்றச்சாட்டு எதிர்காலத்தில் வரக்கூடாது என்று எச்சரித்தார்.
போலீசாருக்கு கடும் கண்டனம்
தொடர்ந்து நீதிமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்து, தவறாக வழிநடத்திய போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ''போலீசாருக்கும், குற்றவியல் வக்கீல்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் வலியும், வேதனையும் தெரியாது. யாருக்கோ வேலை செய்கிறார்கள்.. அவர்களை பற்றி பேசி பேசியே நான் கலைப்பு அடைந்து விட்டேன். குற்றவியல் அரசு வக்கீல், போலீசுக்கு வழக்கறிஞர் கிடையாது. பொதுமக்களின் வழக்கறிஞர்.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி செல்கிறார் என்றால், மருத்துவமனையில் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உறுதி செய்யமாட்டாரா?'' எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, மனுதாரர் எப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் என்பது உள்ளிட்ட தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்யும் படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிலைய அதிகாரிக்கு (ஆர்எம்ஓ) உத்தரவிட்டார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications