சந்தர்ப்பவாத அரசியல் வேகமாக பயணிக்கிறது என்பதற்கு மகாராஷ்டிரா அரசியல் சாட்சி- ராமதாஸ்
Recommended Video
சென்னை: சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு மகாராஷ்டிரா அரசியல் சாட்சி என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் என்சிபி-காங்கிரஸ்-சிவசேனா இணைந்து இன்று புதிய அரசை அமைக்க இருந்தன. இந்த நிலையில் என்சிபியின் அஜித் பவார் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பாஜக- என்சிபி (அஜித் பவார் பிரிவு) இணைந்து புதிய அரசை அமைத்துள்ளன. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும் துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றுள்ளனர்.
மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைத்தது பாரதிய ஜனதா. காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனா ஆட்சி. காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி. மராட்டியத்தில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி!
— Dr S RAMADOSS (@drramadoss) November 23, 2019
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளதாவது:
மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைத்தது பாரதிய ஜனதா. காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனா ஆட்சி. காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி. மராட்டியத்தில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி!
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.