3ல் ஒரு பங்கு நிர்வாகிகள்.. பூத் கமிட்டியால் டென்ஷனான எடப்பாடி பழனிசாமி.. தவிக்கும் அதிமுக!
சென்னை: அதிமுகவில் செயல்பட்டு வரும் மூன்றில் ஒரு பங்கு மாவட்டச் செயலாளர்கள் முறையாக பூத் கமிட்டி அமைக்காதது எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்கு சென்றுள்ளது. இதனால் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் தீவிரமாக இயங்குங்கள் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பின் தமிழ்நாடு தேர்தல் களம் சூடு பிடிக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் அதிமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் தவெக உடனான கூட்டணி குறித்து பேசப்பட்டாலும், மாவட்டச் செயலாளர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை எடப்பாடி பழனிசாமி வழங்கியதாக தெரிகிறது. குறிப்பாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பூத் கமிட்டியை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பாக 68,019 ஆயிரம் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் தலா 9 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு அதிமுக மேலிட பார்வையாளர்கள் தலைமையில் அதிமுக ஐடி விங் மூலமாக ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் உள்ள அதிமுகவினர், ஆதரவாளர்களை கொண்டு ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்க அறிவுறுத்தி இருக்கின்றனர்.
எந்த நேரத்திலும் பூத் கமிட்டியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்பு கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு நிர்வாகிகள் முறையாக பூத் கமிட்டி அமைக்காதது குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார். அதில் 21 நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வார்னிங் கொடுத்துள்ளார்.
குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் அவ்வளவு ஆக்டிவாக இல்லை என்று எடப்பாடி பழனிசாமி காதுகளுக்கு தகவல் சென்றுள்ளது. வயது வரம்பு மற்றும் குற்றப் பின்னணி இல்லாதவர்களை பூத் கமிட்டியில் நியமிக்க எடப்பாடி பழனிசாமி கூறியதால், இந்தப் பணிகள் கடினமாக இருப்பதாக சிலர் புலம்பி இருக்கின்றனர். இதனால் இபிஎஸ் டென்ஷனில் இருப்பதாக விவரம் அறிந்த சிலர் கூறுகின்றனர்.
-
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications