Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம்.. அதிமுகவை பின்னுக்கு தள்ள முயற்சி.. திருமாவளவன் குற்றச்சாட்டு!

அதிமுகவை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக பாஜக வர முயற்சிப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக விவகாரத்தில் பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக முடிவு எடுத்ததாக தெரியவில்லை என்று கூறியுள்ள திருமாவளவன், அதிமுகவை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக வர பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அதிமுகவின் உட்கட்சி மோதல் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இதனிடையே ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இரு தரப்பும் பாஜகவின் ஆதரவை கோரிய நிலையில், தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க கால தாமதம் செய்து வருகிறது. இதனிடையே பாஜக நிலைப்பாடு எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்விக்கு, அதிமுக இன்னும் 2 நாட்கள் காத்திருக்கட்டும் என்று நாராயணன் திருப்பதி பதில் அளித்திருந்தார்.

வேட்பாளர் அறிவிப்பு

வேட்பாளர் அறிவிப்பு

ஆனால் அடுத்த நாளிலேயே அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் பாஜகவின் நிலைப்பாட்டிற்காக அதிமுக காத்திருக்கவில்லை என்று பார்க்கப்பட்டது. இதனிடையே இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

 தேர்தல் ஆணையம் பதில்

தேர்தல் ஆணையம் பதில்

அதில் ஓபிஎஸ் மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையிலுள்ளதால், கடந்த ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு விதிமாற்றங்களை கருத்தில் கொள்வதில்லை. ஜூலையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு முடிவுகளையும் அங்கீகரிக்கவில்லை என்று கூறியுள்ளது.

இபிஎஸ்-க்கு பின்னடைவு

இபிஎஸ்-க்கு பின்னடைவு

இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இரட்டை இலை சின்னமும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு புதிய சின்னத்தில் போட்டியிடவே அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்க உள்ள நிலையில், தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைக்க இபிஎஸ் தரப்பு தயாராகி வருகிறது.

திருமாவளவன் கருத்து

திருமாவளவன் கருத்து

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் பதில் மனு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், அதிமுக விவகாரத்தில் பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக முடிவு எடுத்ததாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக வர பாஜக முயற்சிப்பதாக விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+