பிரபல யூடியூபர் புஷ்பாவுக்கு வந்த சபலம்! புத்தி தடுமாறி கணவரை பிரிந்து.. கடைசியில் இப்படியொரு நிலைமை
சென்னை: நாட்டில் குடும்ப வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவாகியுள்ள வழக்குகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குடும்ப வன்முறைகளால் இளம் வயதினரின் விவாகரத்துகளும் பெருகிவிட்டதாக நீதிமன்றங்களும் கவலை தெரிவித்து வருகின்றன.. குடும்ப வன்முறையை களைய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையிலும், போதுமான பலன் இன்னும் கிட்டவில்லை என்றே சொல்லலாம். இதோ இந்த ஹரியானா கொடுமையை பாருங்கள்.
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தை சேர்ந்தவர் புஷ்பா.. திருமணமான புஷ்பா, கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். பிறகு சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை துவங்கி நடத்த துவங்கினார் புஷ்பா.. இந்த யூடியூப் சேனலில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் நல்ல வருமானத்தையும் ஈட்டி வந்தார்.

பிரபல யூடியூபர்கள்
அப்போதுதான், ஹர்சனா கிராமத்தை சேர்ந்த சந்தீப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சந்தீப்பும் சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் வைத்து நடத்தி வருகிறார். இருவருமே யூடியூப் மூலம் பழக்கமானதால், நாளடைவில் அந்த நட்பு, தகாத உறவில் முடிந்தது.
ஒருகட்டத்தில் சந்தீப்புடனேயே ஒன்றாக சேர்ந்து வாழ முடிவுசெய்தார் புஷ்பா. இதற்காக கணவரை விட்டு பிரிந்து, சந்தீப்புடனேயே சென்றுவிட்டார். இருவரும் யூடியூபர்கள் என்பதால், இருவரும் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்தனர். இதனால் பணம் இருவருக்குமே கொட்ட துவங்கியது.
புஷ்பா எடுத்த முடிவு
இந்நிலையில், கடந்த 5ம் தேதி, சந்தீப் வீட்டிலேயே, புஷ்பா தூக்கில் தொங்கிவிட்டார்.. புஷ்பாவின் சடலத்தை கண்டு சந்தீப் கதறி கதறி அழுதார்.. அதற்குள் இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த போலீஸார், புஷ்பாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு புஷ்பா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற விசாரணை ஆரம்பமானது.
ஆனால் எந்த க்ளூவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.. இதற்கு பிறகுதான், புஷ்பாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அதை பார்த்ததுமே போலீசார் ஆடிப்போனார்கள்.. காரணம், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், புஷ்பாவின் கழுத்து நரம்புகள் நெறிபட்டிருப்பதாக தெரியவந்தது. அதாவது புஷ்பா கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
கள்ளக்காதல் ஜோடி
இதையடுத்து போலீசார் சந்தீப்பிடம் விசாரணையை நடத்தினர்... அப்போதுகூட, புஷ்பா, புஷ்பா என்று சந்தீப் அழுது கொண்டேயிருந்தார். சந்தீப்பின் தாரை தாரையான கண்ணீர்தான் போலீசாருக்கு சந்தேகத்தை தந்தது. இறுதியில் தங்கள் பாணி விசாரணையை நடத்தியதுமே, புஷ்பாவை கொன்றது தான் தான் என்று பொசுக்கென்று உண்மையை சொல்லிவிட்டார் சந்தீப்.
அதாவது கணவரை விட்டு பிரிந்து வந்ததுமே, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு புஷ்பா சந்தீப்பை வற்புறுத்தி வந்தாராம்.. ஆனால், புஷ்பாவை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு வந்துள்ளன.
சம்பவத்தன்றும் இப்படித்தான் காதலர்களுக்குள் சண்டை வந்துள்ளது. இதனால் எரிச்சலும், ஆத்திரமுடைந்த சந்தீப், புஷ்பாவின் கழுத்தை நெரித்தே கொன்றுவிட்டாராம். இவ்வளவையும் போலீசாரிடம் வாக்குமூலமாக தந்ததையடுத்து, சந்தீப்பை போலீசார் தற்போது கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். கூடா நட்பு கேடாய் தானே முடியும்?!!!!
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications