'வசூல்ராஜா ஓபிஎஸ்' உலக கோடீஸ்வரர் பட்டியலில் அவர் இருக்கிறார்! போட்டு தாக்கிய ஜெயக்குமார்! உண்மையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் போல வசூல்ராஜா ஓபிஎஸ் எனவும், உலக கோடீஸ்வரர் வரிசையில் இருப்பது போல ஓ.பன்னீர்செல்வம் பணம் வைத்திருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளருமான ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சமீப காலமாக ஓபிஎஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் நேற்று மதுரை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், திருமங்கலம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டிற்கு வந்து அவருக்கு மாலை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

 அமைச்சர்கள் ராஜினாமா

அமைச்சர்கள் ராஜினாமா


அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம்," அதிமுக தலைமை கழகம் எடப்பாடி பழனிச்சாமியின் அப்பா விட்டு சொத்தா? என் வீட்டில் நான் திருடுவேனா? தலைமை கழகம் எனது வீடு, பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போது 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம் என அறிவுறுத்தினேன். ராஜினாமா செய்துவிட்டு தொகுதியில் கட்சி வேலை பார்க்க வலியுறுத்தினேன், நான் பேச ஆரம்பித்தால் அவ்வளவு விஷயம் இருக்கிறது என பேசினார்.

வடிகட்டிய பொய்

வடிகட்டிய பொய்

இந்நிலையில் ஓபிஎஸ் சொல்வதெல்லாம் வடிகட்டிய பொய் எனவும், உலக கோடீஸ்வரர் வரிசையில் இருப்பது போல ஓ.பன்னீர்செல்வம் பணம் வைத்திருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளருமான ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ஓ.பன்னீர்செல்வம் வகித்த அனைத்து பதவிகளுமே பணம் அதிகமாக புழக்கம் இருக்கும் பதவிகள் எனவும் வீட்டுவசதி, கருவூலம், நிதி என அனைத்து துறைகளுமே கேட்டு வாங்கிக் கொண்டவர் தான் ஓபிஎஸ்.

 ஜெயக்குமார்

ஜெயக்குமார்

உலக கோடீஸ்வரர் வரிசையில் இருப்பது போல ஓ.பன்னீர்செல்வம் பணம் வைத்திருக்கிறார். வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் போல வசூல்ராஜா ஓபிஎஸ். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நான் உட்பட 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம் என பேசியதாக ஓ.பன்னீர்செல்வம் கூறுவது கடைந்தெடுத்த பொய். ஒருவேளை அப்படி சொல்லி இருந்தால் நான் தான் முதல் ஆளாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பேன்.

அதிமுக அலுவலகம்

அதிமுக அலுவலகம்

அதிமுக அலுவலகம் தன் வீடு போல எனக் கூறும் ஓபிஎஸ் பொதுக்குழு நடைபெறும் நேரத்தில் அங்கு சென்றது ஏன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயிருக்கிறது. காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரை குறித்து முழுமையான அறிக்கை வெளிவந்த பிறகு என்னுடைய கருத்துக்களை தெரிவிக்கிறேன்" என மிகக் கடுமையாக விமர்சித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+