EXCLUSIVE அதிமுகவில் பிரச்சினையில்ல நடப்பது ‘ஆபரேசன்’! கிளைமாக்ஸ பாருங்க! சொல்வது ‘டாக்டர்’ பரமசிவம்
சென்னை : அதிமுகவில் தற்போது நடப்பது பிரச்சனை இல்லை எனவும் அதிமுகவில் உடைந்த பாகங்களை சரி செய்யும் அறுவைச் சிகிச்சை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிமுக பூரண குணமடையும் என அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் விபிபி பரமசிவம் கூறியுள்ளார்.
Recommended Video

அதிமுகவை பொருத்தவரை நிலைமை சற்று தீவிரமாகவே இருக்கிறது என்று கூறலாம். அந்த அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
அதிமுக பொதுக்குழு செயற்குழு எடுத்த முடிவுகள் செல்லாது என நீதிமன்றத்தில் ஓ .பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்த நிலையில் அவர் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கடும் பின்னடைவை சந்தித்தாலும் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து ஒன்றிய செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னாள் நிர்வாகிகள் என பலரும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவில் என்னதான் நடக்கிறது என்பது குறித்து அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான மருத்துவர் விபிபி பரமசிவம் ஒன் இந்தியா தமிழிடம் பல பிரத்தியேக தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

விபிபி பரமசிவம்
இது தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,"மருத்துவர் என்ற முறையில் அதிமுகவில் தற்போது அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. எப்படி ஒரு விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றுவோமோ அதேபோல அதிமுகவை நிச்சயம் காப்பாற்றுவோம். அவ்வாறு சிகிச்சை அளிக்கும் போது எலும்புகள் உடையும், ரத்தம் வீணாகும். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி மீண்டும் உடல் எப்படி புது பொலிவு பெற்று மீண்டெழுந்து வருகிறதோ, அதேபோல அதிமுக நிச்சயம் மீண்டெழும் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவராக செயல்பட்டு அதிமுகவை நிச்சயம் மீட்டெடுப்பார்.

அணிகளுக்கு என்ன காரணம்?
அதிமுகவில் தற்போது பல்வேறு அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள் அதற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு," அதிகார ஆசை தான் காரணம். சசிகலாவும் டிடிவி தினகரனும் அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என நினைத்தார்கள். அவர்களை தொண்டர்களே கட்சியை விட்டு தற்போது விலக்கி வைத்துள்ளனர். அதேபோல ஓ.,பன்னீர்செல்வம் அதிகார ஆசை காரணமாக தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறாக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே அவர் தற்போது தொண்டர்களாலே ஓரம் கட்டப்பட்டுள்ளார். இனிவரும் காலங்களில் தொண்டர்கள் எண்ணத்துக்கு மாறாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கும் இதே தான். ஏனென்றால் தொண்டர்களுக்கான கட்சி அதிமுக. தொண்டர்கள் எடுப்பதுதான் முடிவு. தொண்டர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டதால் தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் ஒற்றை தலைமையாக அதிமுகவின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓபிஎஸ்ஐ அதிமுகவில் இருந்து ஒதுக்க என்ன காரணம்? என்ற கேள்விக்கு "சுயநலம் ஒன்றே காரணம் அதிமுகவை பொறுத்தவரை சுயநலவாதிகளுக்கு இங்கு இடம் இல்லை. தானும் தன் மகனும் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டார். குறிப்பாக அதிமுகவில் திமுக எதிர்ப்பு என்ற பிரதான கோரிக்கையில் இருந்து அவர் விலகி விட்டார். அவர் வெளிப்படையாக முதல்வரை பாராட்டுவது அவரது மகன் திமுக தலைவரை சந்திப்பது என திமுகவுடன் இணக்கமாக செயல்பட்டது தொண்டர்களுக்கே பிடிக்கவில்லை. மேலும் மக்களவைத் தேர்தலில் மகனை மட்டும் வெற்றி பெற வைத்தால் போதும் என்ற நோக்கிலேயே ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டார். இதன் காரணமாகவே அவர் தற்போது கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு இருக்கிறார். இது அதிமுகவினர் எடுத்த முடிவு அல்ல அவராகவே தானாக எடுத்துக் கொண்ட முடிவு. இதற்கு அவர் மட்டுமே முழு பொறுப்பு. யாரையும் குற்றம் சொல்ல முடியாது. குற்றம் சொல்லும் தகுதியையும் அவர் இழந்து விட்டார்."

கிளைமேக்ஸ் தான் என்ன?
ஏற்கனவே இரு பொதுக்குழுவை பார்த்துவிட்டாகிவிட்டது. மீண்டும் ஒரு பொதுக்குழு என்றால் எப்படி? அதிமுகவில் கிளைமாக்ஸ் தான் என்ன? என்ற கேள்விக்கு "ஏற்கனவே பொதுக்குழுவில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டதோ. அதே முடிவுகள் தான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு நடத்தப்படும் பொதுக்குழுவிலும் எடுக்கப்படும் .அது அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்து கட்சிக்கு துரோகம் செய்தவர்களை கட்சியை விட்டு விரட்டுவது தான். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நிச்சயமாக அதிமுகவில் நடக்கும் தற்போதைய நிகழ்வில் நல்ல கிளைமாக்ஸ் இருக்கும். அது எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதும், கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்கள் மீண்டும் நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று உலா வருவதும் தான்" என்றார்.
-
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா!












Click it and Unblock the Notifications