சென்னையில் சதமடிக்கப்போகும் பெட்ரோல் விலை - இன்று எவ்வளவு தெரியுமா
பெட்ரோல், டீசல் விலை இன்று எவ்வித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. சென்னையில் விரையில் சதமடிக்கப் போகிறது பெட்ரோல் விலை. ஒரு லிட்டர் ரூபாய் 98.88 டீசல் விலையும் ஒரு லிட்டர் 92.89 ரூபாயை தாண்டியுள்ளது.
சென்னை: கொரோனா லாக்டவுன் காலத்தில் பெட்ரோல் டீசல் விலை தினசரியும் உயர்த்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் மாற்றமின்றி விற்பனையாகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை தொட்டுள்ளது. டீசல் விலையும் ஒரு லிட்டர் 92 ரூபாயை தாண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினசரியும் உயர்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா லாக்டவுன் காலத்திலும் தினசரியும் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 16 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டது. ஜூன் மாதத்திலும் அடுத்தடுத்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை இன்று வரை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.
நேற்றைய தினம் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 98 ரூபாய் 88 பைசாவாக விற்பனையானது. ஒரு லிட்டர் டீசல் 92 ரூபாய் 89 பைசாவாக விற்பனை செய்யப்பட்டது. இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
விழுப்புரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 8 பைசாவாக விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் டீசல் 94.20 ரூபாய்க்கும் விற்பனையானது. பவர் பெட்ரோல் ரூ.102.67க்கு விற்றது.
விழுப்புரத்தில் முதன் முறையாக 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைத் தவிர்க்க பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications