Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வணிக சிலிண்டர் விநியோகத் தடையால் உணவகத் துறை பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்துள்ளது. சென்னை ஓட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ள தகவலின்படி, பெரும்பாலான உணவகங்களில் இன்னும் ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது.. இந்நிலையில் எம்பி வெங்கடேசன் பதிவிட்டுள்ள ட்வீட், இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளதால், இந்தியாவில் வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

Gas Cylinder lpg Commercial Supply Tamil Nadu mp Venkatesan

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு

தட்டுப்பாட்டை சமாளிக்க வீட்டு உபயோக சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதுடன், ஒரு சிலிண்டர் பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது. அதேவேளையில், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வணிக எரிவாயு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விநியோகத் தடையால் உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன; குறிப்பாகப் பல முன்னணி ஓட்டல்களில் ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதால், விநியோகம் சீரடையாவிட்டால் கடைகளை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மின்சார அடுப்புகள்

தமிழகத்தில் சிலிண்டர் கையிருப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், நிலைமையைச் சமாளிக்க ஓட்டல்களின் வேலை நேரத்தைக் குறைக்கவும், மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஏற்கனவே ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மற்றும் முதல்வருக்குச் சென்னை ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

சென்னை ஓட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ள தகவலின்படி, பெரும்பாலான உணவகங்களில் இன்னும் ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது. விநியோகம் உடனடியாகச் சீராகவில்லை எனில், உணவகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அடையாறு ஆனந்த பவன் உரிமையாளர் சீனிவாச ராஜா கூறுகையில், எரிவாயு தட்டுப்பாட்டால் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்

சிலிண்டர் கையிருப்பு

தமிழகத்தில் நிலவும் இந்த இக்கட்டான சூழலை ஆய்வு செய்யத் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது சிலிண்டர் கையிருப்பு எவ்வளவு உள்ளது? தினசரித் தேவை எவ்வளவு? என்பது குறித்து விரிவான அறிக்கையை உடனடியாகத் தாக்கல் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்குத் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. போர் நீடிக்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய கூடுதல் நெருக்கடிகளைச் சமாளிக்கத் தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

25 நாட்களுக்கு பிறகே சிலிண்டர் பதிவு

இந்நிலையில் மதுரை எம்பி வெங்கடேசன், நிலவும் கேஸ் தட்டுப்பாடு விவகாரத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்..

அதில், "வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை.. ஒரு சிலிண்டர் பதிவு செய்த 25 நாட்களுக்கு பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்ய முடியும்.. ஹோட்டல்கள் கோரிக்கையை ஆய்வு செய்ய குழு அமைப்பு.. சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் நேரடியாக நம் வீட்டு அடுப்பங்கரையிலும், அன்றாட உணவிலும் எதிரொலிக்க தொடங்கிவிட்டன-" என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+