சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா ரிஷிகள்,முனிவர்களால் பிறந்தது! பிரதமர் மோடிக்கும் நன்றி! ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்ன காரணம்..?

Google Oneindia Tamil News

சென்னை : இந்தியா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகள் மற்றும் முனிவர்களால் பிறந்தது எனவும், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா ஒரே குடும்பமாக உருவாகி வருவதற்கு காரணமான பிரதமர் மோடிக்கு நன்றி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

Governor RN Ravi says India was born thousands of years ago by Rishis and sages

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் வரலாறு குறித்த நிரந்தர கண்காட்சி தொடக்க விழா சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு காஞ்சி கோஷ் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் கண்காட்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது குறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாராப்பூர்வ
ட்விட்டர் பக்கத்தில், "ஆளுநர் ரவி காஞ்சி கோஷ் கண்காட்சி தொடக்க விழாவில் பாரதத்தின் சனாதன கலாச்சார ஆன்மிகத்திற்கு சேவை செய்வதில் காஞ்சி பீடத்தின் மகத்தான பங்களிப்பை எடுத்துரைத்தார்.

Governor RN Ravi says India was born thousands of years ago by Rishis and sages

பாரதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது ரிஷிகள் மற்றும் முனிவர்களால் பிறந்தது என்றும், சுதந்திரத்திற்குப் பிறகு பாரதம் ஒரே குடும்பமாக உருவாகி வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர் ரவி நன்றி கூறினார்" என்று அதில்பதிவிடப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu Governor RN Ravi has said that India was born thousands of years ago by Rishis and sages and thanked Prime Minister Modi for making India a single family after independence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X