Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது தெரியுமா?.. டி.என்.பி.எஸ்.சி கொடுத்த முக்கிய அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதியிருந்தனர். குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது என்பது குறித்து தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது எப்போது என்பது குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் அரசுப்பணியிடங்களை டிஎன்.பி.எஸ்.சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது.குரூப் 1, குரூப் 2 ,2 ஏ, குரூப் 4 என பல்வேறு பதவிகளுக்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்தி வருகிறது.

குரூப் 4 தேர்வு இதில் விஏஓ மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு போட்டித்தேர்வுகள் எழுதுபவர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் உள்ளது.

குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கூடுதல் பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி கொடுத்த அப்டேட்

குரூப் 4 தேர்வு

குரூப் 4 தேர்வு

குரூப் 4 தேர்வுகளை பல லட்சம் போட்டித்தேர்வர்கள் எழுதி வருகின்றனர். போட்டித்தேர்வர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் தேர்வாகவும் குரூப் 4 உள்ளது என்று சொன்னால் கூட அது மிகையாக இருக்காது. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 7,301 பணியிடங்களுக்கு இந்த குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு என்றாலும் இந்த தேர்வுக்கு முதுகலை கட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பித்து இருந்ந்தனர்.

21 லட்சம் பேர்

21 லட்சம் பேர்

இந்த தேர்வை எழுதை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த்தனர். அதாவது டிஎன்பிஎஸ்.சி வரலாற்றில் குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்தது இதுவே முதல் முறையாக இருந்தது. இதற்கு முன்பு கடந்த 2017 ஆம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்ததே இதற்கு முன்பாக அதிக எண்ணிக்கையாக இருந்ததது. தமிழகம் முழுவதும் 7,689 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

முடிவுகள் எப்போது வெளியிடப்படும்

முடிவுகள் எப்போது வெளியிடப்படும்

21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தாலும் இந்த தேர்வை சுமார் 15 லட்சம் பேர்தான் எழுதியிருந்தனர். குரூப் 4 தேர்வு நடைபெற்று கிட்டதட்ட 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. இந்த நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த தகவலை டி.என்.பி.எஸ்.சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு

பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு

அதாவது, இந்த தேர்வு முடிவுகள் வரும் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் எப்போது என்ற அப்டேட் வந்துள்ளதால் குரூப் 4 தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த பணியிடங்கள் 9,870 ஆக உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால், இன்று டி.என்.பி.எஸ்.சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 7,302 என மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் மத்தியில் சற்று ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+