குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது தெரியுமா?.. டி.என்.பி.எஸ்.சி கொடுத்த முக்கிய அப்டேட்
சென்னை: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதியிருந்தனர். குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது என்பது குறித்து தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது எப்போது என்பது குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் அரசுப்பணியிடங்களை டிஎன்.பி.எஸ்.சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது.குரூப் 1, குரூப் 2 ,2 ஏ, குரூப் 4 என பல்வேறு பதவிகளுக்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்தி வருகிறது.
குரூப் 4 தேர்வு இதில் விஏஓ மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு போட்டித்தேர்வுகள் எழுதுபவர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் உள்ளது.
குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கூடுதல் பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி கொடுத்த அப்டேட்

குரூப் 4 தேர்வு
குரூப் 4 தேர்வுகளை பல லட்சம் போட்டித்தேர்வர்கள் எழுதி வருகின்றனர். போட்டித்தேர்வர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் தேர்வாகவும் குரூப் 4 உள்ளது என்று சொன்னால் கூட அது மிகையாக இருக்காது. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 7,301 பணியிடங்களுக்கு இந்த குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு என்றாலும் இந்த தேர்வுக்கு முதுகலை கட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பித்து இருந்ந்தனர்.

21 லட்சம் பேர்
இந்த தேர்வை எழுதை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த்தனர். அதாவது டிஎன்பிஎஸ்.சி வரலாற்றில் குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்தது இதுவே முதல் முறையாக இருந்தது. இதற்கு முன்பு கடந்த 2017 ஆம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்ததே இதற்கு முன்பாக அதிக எண்ணிக்கையாக இருந்ததது. தமிழகம் முழுவதும் 7,689 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

முடிவுகள் எப்போது வெளியிடப்படும்
21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தாலும் இந்த தேர்வை சுமார் 15 லட்சம் பேர்தான் எழுதியிருந்தனர். குரூப் 4 தேர்வு நடைபெற்று கிட்டதட்ட 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. இந்த நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த தகவலை டி.என்.பி.எஸ்.சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு
அதாவது, இந்த தேர்வு முடிவுகள் வரும் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் எப்போது என்ற அப்டேட் வந்துள்ளதால் குரூப் 4 தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த பணியிடங்கள் 9,870 ஆக உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால், இன்று டி.என்.பி.எஸ்.சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 7,302 என மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் மத்தியில் சற்று ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
-
மத்திய பாதுகாப்பு படையில் ஹெட் கான்ஸ்டபிள் வேலை.. 233 காலியிடங்கள்! 81 ஆயிரம் சம்பளம்! விட்றாதீங்க -
IT JOBS: அனுபவம் தேவையில்லை.. சோழிங்கநல்லூரிலேயே நாளை - நாளை மறுநாள் இண்டர்வியூ.. அங்கேயே பணி -
IT Jobs: ரூ.8 லட்சம் வரை சம்பளம்.. வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. அசத்தலான சான்ஸ் -
மாதம் 1 லட்சம் சம்பளத்தில் வங்கியில் வேலை.. பிஇ தகுதி தான்.. இன்னும் 2 நாள் தான் இருக்கு! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications