குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கூடுதல் பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி கொடுத்த அப்டேட்
சென்னை: 7,301 பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில், கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. டிஎன்.பி.எஸ்.சியின் இந்த அறிவிப்பு தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழகத்தில் அரசுத்துறைகளில் பல்வேறு காலிப்பணியிடங்களை டிஎன்.பி.எஸ்.சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது.
குரூப் 1, குரூப் 2 ,2 ஏ, குரூப் 4 என பல்வேறு பதவிகளுக்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்தி வருகிறது.

குரூப் 4 தேர்வு
இதில் விஏஓ மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு போட்டித்தேர்வுகள் எழுதுபவர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் உள்ளது. குரூப் 4 தேர்வுகளை பல லட்சம் போட்டித்தேர்வர்கள் எழுதி வருகிறார். அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 7,301 பணியிடங்களுக்கு இந்த குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு என்றாலும் இந்த தேர்வுக்கு முதுகலை கட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிப்பது உண்டு.

முறைகேடுகள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக
ஜூலை மாதம் நடைபெற்ற தேர்வை எழுதுவதற்காக சுமார் 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்ததே இதற்கு முன்பாக அதிக எண்ணிக்கையாக இருந்த நிலையில், அதை முறியடித்து இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுக்கு சுமார் 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகம் முழுவதும் 7,689 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தேர்வில் முறைகேடுகள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளையும் டி.என்.பி.எஸ்.சி செய்து இருந்தது.

மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அப்டேட்
இந்த தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதினர். குரூப் 4 தேர்வு நடைபெற்று கிட்டதட்ட 6 மாதங்கள் ஆகியுள்ள தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனினும், இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்சி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாதது தேர்வர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு அப்டேட்டை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

கூடுதலாக 2,500 பணியிடங்கள்
குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்படுவதாக டி.என்.பி.எஸ்சி அறிவித்துள்ளது. இதன் மூலம் குரூப் 4 தேர்வு மூலமாக நிரப்படும் பணியிடங்கள் எண்ணிக்கை 9,870- ஆக உயர்ந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சியின் இந்த அறிவிப்பு தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருவதாகவும் வரும் ஜனவரியில் தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications