பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. தமிழக தேர்வுத்துறை நீட்டித்த காலக்கெடு.. மகிழ்ச்சி செய்தி
சென்னை: 10ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் 19-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் தரப்பட்டுள்ளது.. இது தொடர்பான அறிவிப்பினை அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.. இந்த கால அவகாசமானது பொதுத் தேர்வு மாணவர்களுக்கு பெருத்த நிம்மதியை தந்து வருகிறது.
வழக்கமாக, பொதுத் தேர்வு எழுத போகும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டதுமே, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் எமிஸ் தளத்தில் மாணவர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் படுவார்கள்.

மாணவர்கள் பெயர் திருத்தம்
அது மட்டுமல்ல, மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரி பார்க்க வேண்டும். அதில் திருத்தங்கள் இருந்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் அவைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவரின் பெயர், பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறே இருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் அறிவுறுத்தப்படுவார்கள்..
அரசிதழில் பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே அதன் நகலை பெற்று அதன் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்..
ஆவணங்கள், அரசு பள்ளி மாணவர்கள்
அதேபோல சமீபத்தில் எடுக்கப்பட்ட மாணவருடைய பாஸ்போர்ட் அளவு போட்டோவை படத்தை மட்டுமே அப் லோடு செய்யவேண்டும். இதுதவிர, தேர்வு முடிவுகள் மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதனால் பதிவேற்றம் செய்யப்படும் செல்போன் எண் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தேர்வில் சலுகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் அதற்குரிய ஆவணங்களுடன் இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பிறகு திருத்தங்கள் கோரி தேர்வுத்துறைக்கு அனுப்பக்கூடாது என்பது போன்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
கால அவகாசம் நீட்டிப்பு
இந்த நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் தான் தற்போது வெளியாகி உள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் விரைவில் தயாரிக்கப்பட இருக்கிறது.
இதையடுத்து எமிஸ் தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்து திருத்தம் இருப்பின் அவற்றை மேற்கொள்ளலாம் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.
இணையதளம் பதிவேற்றம்
அதன்படி, மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் நவம்பர் 19ந்தேதிக்குள் அதாவது நேற்று முன்தினத்திற்குள் பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த கால அவகாசத்தை வருகிற 27-ந்தேதி வரை நீட்டித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள இதுவே இறுதியான வாய்ப்பாகும். இதை தலைமையாசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த பெயர்ப்பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால் பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்ளவேண்டும்.
ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும்' என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசமானது பொதுத் தேர்வு மாணவர்களுக்கு பெருத்த நிம்மதியை தந்து வருகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications