தமிழகத்தில் மிக கனமழை... 5 நாட்களுக்கு கவனம் மக்களே - வானிலை அறிக்கை

தமிழ்நாட்டில் வரும் 30 ஆம் தேதிவரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை திங்கட்கிழமை தொடங்கியது. பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டியது. அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டம், சத்தியமங்கலத்தில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது.

Heavy rain on 29th Oct in Tamil Nadu says IMD report

இந்த நிலையில் இன்று முதல் 30ஆம் தேதி வரைக்கும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் 29ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 29ம் தேதியில் கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, காரைக்காலில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அக்டோபர் 30ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தலைநகர் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

நாளைய தினம் தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் மத்திய பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended Video

    இதோ ஆரம்பிச்சாச்சு.. வடகிழக்கு பருவமழை… 7 மாவட்டங்களில் இன்று கனமழை!

    அக்டோபர் 27 மற்றும் 28ம் தேதியில் வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. அக்டோபர் 29, 30 மற்றும் 31 ஆம் தேதியில் மன்னார் வளைகுடா, தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். அக்டோபர் 30 மற்றும் 31 ஆம் தேதியில் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+