மெரீனாவை திறக்க அரசு உத்தரவிடாவிட்டால் நாங்கள் உத்தரவிடுவோம் - ஹைகோர்ட் நீதிபதிகள் அதிரடி

மெரினாகடற்கரையை திறக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக மாநகராட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெரினா கடற்கரை திறப்பது தொடர்பாக அரசு முடிவெடுக்காவிட்டால் வரும் 30 ம்தேதி நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணை டிசம்பர் 3 ம்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது.

High Court questions in Government delay in allowing public into Marina beach

வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மெரினாவை சுத்தப்படுத்துவதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், லூப் சாலையில், ஆக்கிரமிப்புகள் முளைக்காமல் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மெரினா கடற்கரையில் தள்ளுவண்டிகளுக்கான டெண்டரை திறக்க தனி நீதிபதி தடை விதித்துள்ளதால், அந்த டெண்டரை திறக்க இயலவில்லை எனவும் தெரிவித்தார். பின்னர், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு எப்போது திறக்கப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, நவம்பர் இறுதி வரை மெரினாவை திறக்க வாய்ப்பில்லை என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார். இதையடுத்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டு, திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் அரசு முடிவெடுக்காவிட்டால், நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

High Court questions in Government delay in allowing public into Marina beach

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி ஊரடங்கு நிபந்தனைகள் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ஆகும் அதேவேளையில் மெரினா கடற்கரையை திறப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மெரினா கடற்கரை திறப்பது அரசின் கொள்கை முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதிகள் வரும் 30 ம்தேதி அரசு முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணை ஒத்திவைத்து கடற்கரையில் தள்ளுவண்டிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளை தொடரலாம் என உத்தரவிட்டுள்ளனர்.வழக்கு விசாரணை டிசம்பர் 3 ம்தேதி வரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+