ஜன. 3 முதல் நேரடி விசாரணை மட்டுமே...ஆன்லைன் விசாரணை நிறுத்தம் - ஹைகோர்ட் பதிவாளர் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் வழக்குகள் நடைபெறும் முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயர்நீதிமன்றத்தில் வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் எனவும் ஆன்லைன் மூலம் வழக்குகள் நடைபெறும் முறை நிறுத்தி வைக்கப்படும் எனவும் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஜனவரி 3 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் மறு உத்தரவு வரும் வரை நேரடி விசாரணை தொடரும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற கிளை ஆகியவற்றில் காணொலிக்காட்சி முறையிலான விசாரணை நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

High Court to Stop online trial from January 3rd 2022

கொரோனா தொற்று ஆரம்பித்த போது நீதிமன்ற வழக்கு விசாரணை முழுக்க ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடி மற்றும் காணொளி காட்சி விசாரணை என இரண்டு விசாரணை முறையும் தற்போது அமலில் இருந்து வந்தது.

இந்நிலையில், ஜனவரி 3 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் மறு உத்தரவு வரும் வரை நேரடி விசாரணை தொடரும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற கிளை ஆகியவற்றில் காணொலிக்காட்சி முறையிலான விசாரணை நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற காணொலி விசாரணையில் நீதிபதி தீர்ப்பு வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது கேமரா ஆனில் இருப்பது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், காணொளி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்த காட்சிகளை சிலர் பதிவு செய்ததால் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த நிலையில், 2022 ஜனவரி 3 ஆம் தேதி முதல், சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் ஆன்லைன் விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக நீதித்துறை நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3 முதல் நேரிடையாக வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+