சுந்தர் பிச்சை வீடு தமிழ் சினிமா நடிகரிடம் சென்றது எப்படி.. சென்னை வீட்டை கூகுள் சிஇஓ விற்றது ஏன்
சென்னை: சுந்தர் பிச்சை வளர்ந்த சென்னை வீட்டை தமிழ் சினிமா தயாரிப்பாளர் மணிகண்டன் வாங்கியுள்ளார். இந்த வீடு அவரது கைகளுக்கு எப்படிச் சென்றது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது கூகுள். நாம் இணையத்தில் கிட்டதட்ட எது தேவை என்றாலும் முதலில் செல்வது கூகுள் தளத்திற்குத் தான். இந்த கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பவர் சுந்தர் பிச்சை.

மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை பள்ளிப் படிப்பைப் படித்தது எல்லாம் சென்னையில் தான். அவர் ஐஐடிக்கு செல்லும் வரை அவர் சென்னை அசோக் நகரில் இருக்கும் வீட்டிலேயே வசித்து வந்தார்.
சுந்தர் பிச்சை வீடு:
கடந்த வாரம் அசோக் நகரில் இருந்த சுந்தர் பிச்சையின் வீடு தமிழ் சினிமா நடிகரும் தயாரிப்பாளருமான சி.மணிகண்டனுக்கு விற்கப்பட்டது தான் பேசுபொருள் ஆனது. சுந்தர் பிச்சையின் தந்தை மணிகண்டனுக்கு வீட்டை விற்றிருந்தார். பத்திரப்பதிவு நடக்கும் முன்னர், சுந்தர் பிச்சையின் தந்தையே வீட்டைத் தனது சொந்த செலவில் இடித்தும் கொடுத்துள்ளார். சுந்தர் பிச்சையின் தந்தை வாங்கிய முதல் சொத்து என்பதால் இதன் பத்திரங்களைத் தரும் போது அவர் எமேஷ்னலாகி கண்கலங்கிவிட்டார்.
இதனிடையே பிரபல ஆங்கில ஊடகமான தி பிரிண்டிற்கு மணிகண்டன் அளித்த பேட்டியில், சுந்தர் பிச்சையின் வீட்டை வாங்க முடிந்தது ஒரு "வரம்" என்று குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 2ஆம் தேதியே இந்த வீடு மணிகண்டன் பெயருக்கு மாற்றப்பட்ட போதிலும் இது குறித்த தகவல்கள் கடந்த வாரம் தான் வெளியானது..
இது கூகுள் சி.இ.ஓ., வளர்ந்த இடம் என்று தெரியாமல், கடந்த 10 ஆண்டுகளாகத் தினமும் அந்த வீட்டைக் கடந்து வந்ததை நினைவு கூர்ந்த மணிகண்டன், நண்பர் ஒருவர் மூலமே இந்த வீடு விற்பனைக்கு உள்ளதை அறிந்து கொண்டதாகக் கூறுகிறார். அப்போது வீட்டின் உரிமையாளர் யார் என்றெல்லாம் அவரது நண்பர் கூறவில்லையாம்.
யாருடைய வீடு எனத் தெரியாது:
அவர் ரொம்பவே புகழ் பெற்ற ஒருவர் என்று மட்டும் கூறியுள்ளார். அப்போது உரிமையாளர் அரசியல்வாதியாக மட்டும் இருக்கக் கூடாது என்று மணிகண்டன் வேண்டிக் கொண்டாராம். அடையாறில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் தான் சுந்தர் பிச்சையின் தந்தை ஆர்.எஸ். பிச்சையை முதலில் மணிகண்டன் சந்தித்துள்ளார்.

இது குறித்து மணிகண்டன் மேலும் கூறுகையில், "அவர் முதல் சந்திப்பிலேயே வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு இரண்டு மணிநேரம் பொறுமையாக அனைத்து விவரங்களையும் அவர் விளக்கினார். அதன் பின்னர் என்னைப் பற்றியும் எனது பின்னணியைப் பற்றியும் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து அப்போதே ஆவணத்தைக் கொடுத்து, அதைச் சரிபார்க்கும்படி கூறினார்.
அப்போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.. இது அவர் வாங்கிய முதல் சொத்து. அது அவரது மகனுக்கே சென்றிருக்க வேண்டும். ஆனால், எனக்கு வந்துள்ளது. இப்போது சுந்தர் பிச்சையுடன் அவர்களின் பெற்றோர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். சொத்தை பார்த்துக் கொள்ள வந்து வந்து செல்வதில் சிரமம் இருப்பதாலேயே அவர்கள் வீட்டை விற்க முடிவு செய்துள்ளனர். சுந்தர் பிச்சையின் பாட்டி மட்டும் அங்கு வசித்து வந்தார், ஆனால் அவரும் சமீபத்தில் மறைந்த நிலையில், அதன் பிறகே இதை விற்க முடிவு செய்தனர்.
சுந்தர் பிச்சையின் பெற்றோர் மிகவும் அன்பாக நடந்து கொண்டனர். அவரது தாய் எனக்கு பில்டர் காபி போட்டுக் கொடுத்தார். பத்திரப்பதிவு நாளன்று எங்களுக்கு முன்னால், 50-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர் நினைத்திருந்தால், தான் சுந்தர் பிச்சையின் தந்தை எனக் கூறி வரிசையைத் தவிர்த்திருக்க முடியும். இருப்பினும், அவர் பொறுமையாக வரிசையில் இருந்தே பத்திரப்பதிவை முடித்துக் கொடுத்தார்" என்று அவர் தெரிவித்தார்.
யார் இந்த மணிகண்டன்:
பெரிய நடிகர் ஆக வேண்டும் என்ற கனவுடன் 30 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசியில் இருந்து பாக்கெட்டில் வெறும் 65 ரூபாயுடன் வந்து இறங்கியவர் தான் மணிகண்டன். கடும் முயற்சிக்குப் பிறகு, 2006 ஆம் ஆண்டு கந்தர்வன் படத்தில் அவர் நடித்தார். அதைத் தொடர்ந்து 2010இல் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த அவர், அதன்பிறகு நான்கு படங்களைத் தயாரித்து மூன்று படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் லெக் பீஸ் என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.
சுந்தர் பிச்சை இருந்த வீட்டில் அவர் தனது வீட்டைத் திட்டமிட்டுள்ளார். அவர் கூறுகையில், "நல்ல மனிதர்கள் வாழ்ந்த இந்த இடத்தில் எனது வீட்டைக் கட்ட வேண்டும் என விரும்புகிறேன். கட்டுமானப் பணிகள் முடிந்தவுடன் நானே தனிப்பட்ட முறையில் அமெரிக்கா சென்று சுந்தர் பிச்சை குடும்பத்தினரைப் புதுமனை புகுவிழாவுக்கு அழைக்க உள்ளேன்" என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications