ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்... எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரிசர்வேசன் செய்யாமல் பயணிக்கலாம்
192 ரயில்களில் 2ம் வகுப்பு பெட்டிகளில் மீண்டும் முன்பதிவில்லா பயணம் செய்யும் திட்டத்தை மார்ச் 10ஆம் தேதி முதல் தெற்கு ரயில்வே அறிமுகம் செய்கிறது.
சென்னை: 192 ரயில்களில் 2ம் வகுப்பு பெட்டிகளில் மீண்டும் முன்பதிவில்லா பயணம் செய்யும் திட்டத்தை மார்ச் 10ஆம் தேதி முதல் தெற்கு ரயில்வே அறிமுகம் செய்கிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. நாகர்கோவில், முத்துநகர், உழவன் விரைவு ரயில்களில் ஏப்ரல் 1ம் முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் ரயில் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப எக்ஸ்பிரஸ் ரயில்களை முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டன. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கினாலும் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அகற்றப்பட்டன. அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் ரயில்களில் மட்டும் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு இருக்கைகளாக இயக்கப்படுவதால், ஏராளமான பயணிகள் நீண்ட தூரம் பயணம் செய்வதில் சிரமத்திற்கு ஆளாகினர்.

ரிசர்வேசன் செய்யப்படாத பெட்டிகள்
முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரயில்களை இயக்கமுடியும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே வாரியம் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடையும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 1, 16 மற்றும் 20ஆம் தேதிகளில் 42 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் சேர்க்கப்படும் என்றும், மே 1ஆம் தேதி அன்று 86 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் சேர்க்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே அறிவித்துள்ள அறிக்கை
அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்திற்கு பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் நீக்கப்பட்டு, எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்போர் அனைவரும் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

ரிசர்வேசன் தேவையில்லை
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து அனைத்து ரயில்களிலும் முன்பு போல 2ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளை முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளாக இயக்கும்படி ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் உட்பட 192 விரைவு ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் தென் மாவட்ட ரயில்கள்
முதற்கட்டமாக சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்தில் இருந்து புறப்படும் யஷ்வந்த்புர் மற்றும் ஹூப்ளி விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி 10ம் தேதி முதல் இணைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நாகர்கோவில், முத்துநகர், உழவன் விரைவு ரயில்களில் ஏப்ரல் 1ம் முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும்.

ஏப்ரல் 16 முதல்
ஏப்ரல் 16ம் தேதி முதல், நெல்லை, குமரி, பாண்டியன், பொதிகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவின்றி பயணிக்கலாம். இதன் மூலம் திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 ரயில்வே கோட்டத்திலும் மொத்தமாக 192 விரைவு ரயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக நேற்று முதல் 19 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஏசி பெட்டிகளில் போர்வை
இதனிடையே ஏசி பெட்டிகளில் போர்வை, தலையணை வழங்கப்படாமல் இருந்தது. கொரோனா தொற்று குறைந்து வருவதால் இனி ஏசி பெட்டிகளில் போர்வை, தலையணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications