அதிமுகவில் நவநீதகிருஷ்ணனின் பதவி பறிக்கப்பட்டது ஏன்?.. விளக்கம் அளித்த ஜெயக்குமார்.. பரபர பேட்டி
சென்னை: அதிமுகவில் இருந்து கொண்டு திமுக கட்சி அலுவலகத்துக்கு செல்வதை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
Recommended Video
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்
மேலும், கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்த பிறகு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டதாக அவர் கூறினார்.

எங்களுடன் இருந்தால் மட்டுமே லாபம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் எங்களுக்கு வெற்றியை தருவார்கள் என்று கூறிய ஜெயக்குமார்
திமுகவின் 8 மாத ஆட்சியில் மக்கள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர். தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிட்டு உள்ளனர். சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியாக இருந்தாலும் எங்களுடன் இருந்தால் மட்டுமே லாபம். இல்லை என்றால் விலகி செல்லும் கட்சிக்கு தான் நஷ்டம். கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்எனவும் கூறினார்.

நாகரீகமற்ற செயல்
அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் கட்சி பதவியில் இருந்து நீக்கப்ட்டது குறித்து பதில் அளித்த ஜெயக்குமார்
அதிமுகவில் இருந்து கொண்டு திமுக கட்சி அலுவலகமாக உள்ள அறிவாலயத்திற்கு செல்வது நாகரீகமற்ற செயல். அங்கு கால் வைப்பதே அவமானம் அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் பேசியது ஏற்றுகொள்ள முடியாது என்றும் எனவே கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை போதாது
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது போதாது என்றும் அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் இது போன்ற செயல் தொடர்ந்து நடைபெறும் எனவும் ஜெயக்குமார் கூறினார்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications