அக்னி கலசம் டூ 6 காலண்டர்! யோக்கியன் வர்றானோ? மாரிதாசுக்கு ஜெய்பீம் இயக்குனர் பதிலடி!
சென்னை: மழை விட்டாலும் தூரல் விடவில்லை என்பது போல படம் ரிலீசாகி பல நாட்கள் ஆனாலும் தற்போது வரை ஜெய்பீம் படம் பல்வேறு தளங்களிலும் லைம்லைட்டில் உள்ளது. படத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு காலண்டர் காட்சி காரணமாக தற்போது வரை பாமகவில் இருந்து பல்வேறு தரப்பினர் தொடர்ந்து ஜெய்பீம் படக் குழுவினரையும் நடிகர் சூர்யாவைவும், குறிப்பாக இயக்குனர் ஞானவேலை கடுமையாகத் தாக்கிப் பேசி வருகின்றனர்.
அடுத்தடுத்து போராட்டங்கள், மிரட்டல்கள் படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யாவுக்கும் வந்தன. உச்சகட்டமாக சிதம்பரம் நீதிமன்றத்தில் படக்குழுவுக்கு எதிராக வன்னியர் சங்கம் சார்பாக வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.

சில வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த காலண்டர் தங்கள் கவனத்தில் பதியவில்லை என்றும் அதற்காக வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டார் ஞானவேல்.
இந்நிலையில் ஜெய்பீம் படத்தில் காலண்டர் காட்சி குறித்து அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய மாரிதாஸ், அக்னி கலசம் காலண்டர் காட்சி உட்பட ஆறு காலண்டர் புகைப்படங்கள் இடம் பெற்ற காட்சிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து, திட்டமிட்டு ஒரு சமூகத்தை சாதி வெறியர்களால் கொடூரமாக காட்ட முயல்வது நியாயமா?.. இதை தெரியாமல் நடந்துவிட்டது என்று கூறுவது வடிகட்டிய பொய் என கடுமையாக சாடியிருந்தார்.

இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் மாறுதலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.. அதில், இது அயோக்கிய கும்பல்... -இப்படிக்கு மனிதருள் மாணிக்கம் மாரிதாஸ்.. அன்பான தமிழ் மக்களே.. யோக்கியன் வந்துட்டாரு . மறக்காம சொம்ப எடுத்து உள்ள வைங்க.." என ட்விட் செய்துள்ளார்.. இந்தப் பதிவை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்ததோடு ரீட்வீட் செய்து வருகின்றனர்












Click it and Unblock the Notifications