மின்னல் வேகம்.. தமிழகத்தில் இன்று முதல் 6 நகரங்களில் 5ஜி சேவை துவக்கம்.. உங்கள் ஊர் இருக்கா? பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் சென்னையை தொடர்ந்து மேலும் 6 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஓசூர், வேலூர் நகரங்களில் இன்று முதல் மக்கள் விரைவான 5ஜி சேவையை பெற முடியும். இந்த புதிய 5ஜி சேவையை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று துவக்கி வைத்துள்ளார். இதன்மூலம் 4ஜியை விட 5ஜி மூலம் மக்கள் மின்னல் வேகத்தில் சேவையை பெற முடியும்.
இந்தியா மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் அனைத்து சேவைகளும் மேம்பட்டதாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தியாவை பொறுத்தமட்டில் தற்போது 4ஜி சேவை நடைமுறையில் உள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாட்டில் 5ஜி சேவையை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 5ஜி சேவையை நாட்டில் அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டியது.

5ஜி சேவை அறிமுகம்
இந்தியாவில் 5ஜி நடைமுறைக்கு வந்தால் நம் நாட்டின் பொருளாதார மதிப்பு அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு வளர்ச்சி காணும் எனவும் கணக்கிடப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் 5ஜி சேவைகள் துவங்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1ம் தேதி இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். இந்தியாவை பொறுத்தமட்டில் ஜியோ நிறுவனம் அதிவேக ட்ரூ 5ஜி இணையச் சேவையைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

ஜியோ ட்ரூ சார்பில் 5 ஜி சேவை
இந்தியாவில் தற்போது பல்வேறு முக்கிய நகரங்களில் 5ஜி சேவை பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் சென்னையில் ஜியோ, ஏர்டெல் சார்பில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் மேலும் 6 நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5ஜி சேவையை செயல்படுத்த ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.40,446 கோடி முதலீடு திட்டம் உள்ள நிலையில் 6 நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

6 நகரங்களில் விரிவாக்கம்
அதன்படி தமிழகத்தில் சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஒசூர், வேலூர் ஆகிய 6 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழக தொழில்நுட்ப துறை மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் நீரஜ் மிட்டல் மற்றும் ஜியோ நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.

அமைச்சர் பெருமிதம்
மேலும் அடுத்த 6 மாதங்களில் கூடுதலாக 6 நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், ‛‛இந்தியாவில் 5ஜி டெக்னாலஜி மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும். இதனை துவக்கி வைத்ததில் பெருமைப்படுகிறேன். இதனை எப்படி கையாள போகிறோம் என்பதில் தான் சவால் உள்ளது. 5ஜி சேவை மூலம் இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாக உள்ளது. தொழில் வளர்ச்சியடையும். பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தரவுப் பகுப்பாய்வு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மீது பணியாற்றி வருகின்ற இம்மாநிலத்தின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உத்வேகத்தை இது நிச்சயம் வழங்கும். புதிய வேலைவாய்ப்புகளை வழங்கும்'' என்றார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
26 வயது கொத்தனாருக்கு திருச்சியில் விழுந்த மரண அடி! காமுகர்களுக்கு நீதிபதி ஜெயந்தி தந்த சரியான பாடம் -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications