பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்! என்ன காரணம்?
சென்னை : பல யூட்யூப் சேனல்களில் தொடர்ந்து அரசியல் தொடர்பான கருத்துக்களை பேசி வரும் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கரின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரியும் தற்போது சவுக்கு இணையதளத்தை நடத்தி வரும் பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் தற்போது சமூக வலைதளங்களில் பிரபலம்.

தான் நடத்தி வரும் இணையதளம், ட்விட்டர் பக்கம் மற்றும் பல்வேறு யூட்யூப் சேனல்களில் அன்றாட அரசியல் நிகழ்வு குறித்து காரசாரமாக பேசி வருபவர்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பார்க்காமல் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பரபரப்பான கருத்துக்களை முன்வைத்து வரும் அவரது பேச்சுகளுக்கு ரசிகர்கள் ஏராளம்.
இந்த நிலையில் தான் சவுக்கு சங்கர் ட்விட்டர் பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது. ட்விட்டரின் தனியுரிமைகளை பின்பற்றாததால் சவுக்கு சங்கர் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது இதுவரை தெரியவில்லை.












Click it and Unblock the Notifications