பொங்கல் முடிந்து புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா..அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொன்னது இதுதான்
சென்னை:
தமிழகத்தில் புதன்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அப்படி ஒரு முடிவு எதுவும் எடுக்வில்லை என தெரிவித்துள்ளார். சனிக்கிழமை போகி பண்டிகை, ஞாயிற்றுக் கிழமை பொங்கல் பண்டிகை, திங்கள் கிழமை மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. செவ்வாய் கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இவை அனைத்தும் தமிழக அரசின் விடுமுறை தினங்களாகும்.

போகி பண்டிகைக்கு முதல் நாளான வெள்ளிக் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. அரசு நினைப்பவர்களுக்கு, இது வசதியாக அமையும்.
என கூறப்பட்டது. இந்த நிலையில் பல கல்லூரிகள், தனியார் பள்ளிகளில் மட்டுமே விடுமுறை விடப்பட்டது. அரசு பள்ளிகளுக்கு சனிக்கிழமை முதல் விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் செவ்வாய்கிழமை விடுமுறை முடிந்து புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஜனவரி 18ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications