திருப்பூரில் வாடகை வீட்டில் யாரிது? தோட்டத்தில் அசிங்கமாக பிடிபட்ட நபர்.. அரிசி கார்டுதாரர்கள் உஷார்
திருப்பூர்: தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான தீவிர நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வந்த போதிலும், கடத்தல்கள் குறையவில்லை.. நேற்று ஒரே நாளில் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கடத்தல்களும், கைது நடவடிக்கைகளும் நடந்துள்ளன..
தமிழகத்திலேயே, தேனி மாவட்டத்தின் எல்லை பகுதிகளான கம்பம் மெட்டு, குமுளி மற்றும் போடி மெட்டு வழியாக அண்டை மாநிலங்களுக்கு நாள்தோறும் அரிசி கடத்தப்படுவது ஒரு தொடர்கதையாகவே மாறிவிட்டது.

தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்காக விலையில்லாமல் வழங்கும் இந்த அரிசியை, ஒரு சில கும்பல் லாப நோக்கில் வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். இத்தகைய கடத்தல் பேர்வழிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும், அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
அரிசி கடத்தலை தடுக்க காவல்துறை சார்பில் புகார் எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.. ஈரோடு மாவட்டம் சிவகிரி ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையிலான குழுவினர் அங்கு அதிரடிச் சோதனை நடத்தினர்.
தோட்டத்தில் அசிங்கம்
அப்போது தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,000 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் மீட்டனர். மேலும் அந்த ரைஸ் மில் அருகே நின்றிருந்த ஈச்சர் வேனை சோதனையிட்டபோது, அதில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 10,000 கிலோ ரேஷன் அரிசி கண்டறியப்பட்டது.
மொத்தம் 12 ஆயிரம் கிலோ அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ரைஸ் மில் உரிமையாளர் ராமலிங்கம், மேலாளர் குழந்தைவேல் மற்றும் தாம்சன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் ரேஷன் அரிசியை வாங்கி, அதை பாலிஷ் செய்து வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வருவதாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்துள்ளார்கள்..
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் மிகப்பெரிய அளவில் ரேஷன் அரிசி கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மங்கலம் ரோடு குளத்துப்புதூர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் அரிசி பதுக்கப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
தோட்டத்தில் பதுக்கிய ரேசன் பொருட்கள்
போலீசார் அந்த வாடகை வீட்டை மறைந்திருந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.. அப்போதுதான், தங்கபால் என்பவர் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி, இந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. சுமார் 5 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, அதை அவிநாசி மற்றும் புதிய திருப்பூர் பகுதிகளில் தங்கியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்குக் கூடுதல் விலைக்கு அவர் விற்பனை செய்து வந்ததும் அம்பலமானது..
அதாவது கருவம்பாளையம், பாரப்பாளையம், இடுவம்பாளையம், கோழிபண்ணை மற்றும் குளத்துப்பாளையத்தில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதை மொபட்டில் கடத்தி வந்து வாடகை வீட்டில் பதுக்கி கூடுதல் விற்பனை செய்வதும் தெரியவந்தது.
வாடகை வீட்டில் பதுக்கல்
இதையடுத்து தங்கபாலை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5 டன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு வேன் மற்றும் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசு வழங்கும் இலவச அரிசி தகுதியுள்ள ஏழை மக்களுக்குச் சென்றடையாமல், இடைத்தரகர்கள் மூலம் இவ்வாறு கடத்தப்படுவது நிர்வாக ரீதியிலான சவாலாக உருவெடுத்துள்ளது.
அதிலும் எல்லைப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு இருந்தாலும், நூதன முறையில் அரிசியை பாலீஸ் செய்து விற்பனை செய்யும் கும்பல்கள் அதிகரித்துள்ளன. கடத்தலில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும், தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே இத்தகைய குற்றங்களைத் தடுக்க முடியும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.
ஈரோடு மற்றும் திருப்பூரில் பிடிபட்ட இந்த 17 டன் அரிசி கடத்தல் சம்பவம், ரேஷன் அரிசி விநியோகத்தில் உள்ள ஓட்டைகளை சரிசெய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. அரசு இயந்திரம் இன்னும் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, கடத்தல் கும்பலின் வேர்களைக் கண்டறிய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்....!!
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications