நான் தோற்றுப்போன அரசியல்வாதியா? 20 ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தால்.. கமல்ஹாசன் 'நச்' பதிலடி
சென்னை: நான் தோல்வி அடைந்த அரசியல்வாதி என பலரும் விமர்சிக்கின்றனர். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வரத் தவறியதைத்தான் என்னுடைய தோல்வியாக நான் பார்க்கிறேன்.. அப்படி வந்திருந்தால், நான் பேசும் பேச்சும், இருக்கும் இடமும் வேறாக இருந்திருக்கும் என்று மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இந்தாண்டு ராஜ்யசபா எம்பியாக தேர்வாகுவார் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகஉடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ராஜ்யசபா சீட் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமுக வழங்கும் என தெரிகிறது. அதேபோல் வரும் 2026ம்ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக கணிசமான இடங்களை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021ம் ஆண்டு தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், அந்த கட்சியில் இருந்து பலரும் விலகி மாற்றுக்கட்சியில் இணைந்தனர். அதன்பின்னர் சோர்ந்து இருந்த கமல்ஹாசன், 2024 லோக்சபா தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்தார். அதன்பின்னர் திமுகவுக்கு ஆதரவாக அரசியலை முன்னெடுத்து வருகிறார்.அந்த வகையில் திமுக கூட்டணிகள் இந்தி எதிர்ப்புக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், கமல்ஹாசனும் இந்திக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் மக்கள் நீதி மய்யத்தின் 8 ஆம் ஆண்டு விழாவில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது அவர் கூறும் போது, "நான் ஏதாவது பேசினால், தோற்றுப்போன அரசியல்வாதி என விமர்சிக்கின்றனர். ஆனால் நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அப்படி வரத்தவறியதைத்தான் என்னுடைய தோல்வியாக நான் பார்க்கிறேன். அப்படி வந்திருந்தால், நான் பேசும் பேச்சும், இருக்கும் இடமும் வேறாக இருந்திருக்கும். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் எனபது வேறு என்பதை என்பதை என் அனுபவத்தில் இப்போது நான் புரிந்து கொண்டேன்.
நாம் எல்லோரையும் தமிழ் மொழி தான். தன்னம்பிக்கையுடன் நாம் உயிர்த்திருக்க தமிழக மக்களே காரணம். மொழிக்காக உயிரை விட்டவர்கள் தமிழர்கள். எந்த மொழி வேண்டும், எந்த மொழி வேண்டாம் என்பது தமிழர்களுக்கு தெரியும். நிதி தராத மத்திய அரசு என்பதை, நாளைய வரலாறு சொல்லும். எனக்கு, எந்தளவு காந்தியை பிடிக்குமோ, அந்தளவு பெரியாரையும் பிடிக்கும்.
இந்த ஆண்டு, நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கும். அடுத்த ஆண்டு சட்டசபையில் ஒலிக்கும். அதற்கு கட்டியம் கூறுவது தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இந்த விழா. ஒவ்வொரு ஆண்டும் நாம் கொண்டாடிக் கொண்டே இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் முக்கியமான தருணங்கள் ஆகும். இவை தான் நாம் ஏறி வந்த படிக்கட்டுகள் ஆகும். மக்கள் நீதி மய்யத்தில் மாணவர்கள் பலரும் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அதன் பொருள் என்ன தெரியுமா? மாணவர்கள் நம்முடன் இணைந்து விட்டால் நான் சொன்ன 'நாளை நமதே' என்பதன் அர்த்தம் புரியும் " இவ்வாறு கமல்ஹாசன் விழாவில் பேசினார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம் -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications