ஒரு மந்தையில் இருந்து பிரிந்த 3 ஆடுகள்.. கொங்கில் நேருக்கு நேர் நிற்கும் செ.பா., எஸ்.பி.வி., செங்ஸ்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலம் முக்கிய பங்கை வகிக்க போகிறது. அதிமுக தரப்பில் எஸ்பி வேலுமணி, திமுக தரப்பில் செந்தில் பாலாஜி, தவெக தரப்பில் செங்கோட்டையன் என மூன்று முக்கிய புள்ளிகள் கொங்கு மண்டல பொறுப்பாளர்களாக அந்தந்த கட்சிகளில் இருக்கின்றனர். ஆனால் ஒரு காலத்தில் இவர்கள் மூன்று பேருமே அதிமுகவில் தான் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் தற்போது எதிரெதிர் அணியில் நின்றிருப்பதால் கொங்கு மண்டல அரசியல் சூடு பிடித்திருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலையை துவக்கி விட்டன. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் என தேர்தல் பிரச்சாரங்களிலும், மக்கள் சந்திப்புகளிலும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க கொங்கு மண்டலத்தை இந்த முறை கைப்பற்ற போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் என கொங்கு பகுதி முழுவதும் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.

கொங்கு அரசியல்
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை இதுவரை அதிமுக தான் வலுவாக இருந்தது என சொல்லலாம். குறிப்பாக கோவை மாவட்டம் அதிமுகவுக்கு எப்போதுமே சாதகமான பகுதி. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக ஆதிக்கம் செலுத்தியபோதும் கோவையில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. ஒட்டுமொத்தமாக பத்து தொகுதிகளையும் அதிமுகவை கைப்பற்றியது.
கோவை பகுதி
அப்போது கரூரில் செந்தில் பாலாஜி, ஈரோட்டில் செங்கோட்டையன், கோவையில் எஸ்பி வேலுமணி, நாமக்கல்லில் தங்கமணி என பலரும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதில் செந்தில் பாலாஜி மட்டும் திமுக தரப்பில் இருந்தார். ஆனால் அவர் அதிமுகவில் தான் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையனின் அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது.
செங்கோட்டையன்
தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். அவருக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது. கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலங்களை பொருத்தவரை அதிமுகவில் எஸ்பி வேலுமணியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. கோவையின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இந்த நிலையில் இந்த முறை கொங்கு மண்டலத்தில் கோட்டை விட்டு விடக்கூடாது என்பதற்காக செந்தில் பாலாஜியை திமுக களம் இறக்கி இருக்கிறது.
செந்தில் பாலாஜி
கோவையின் பொறுப்பு அமைச்சராகவும் அவர் இருந்திருக்கிறார். தற்போது பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் கரூரை விட கோவையிலேயே கவனம் செலுத்தி வருகிறார் செந்தில் பாலாஜி என்கிற திமுக உடன் பிறப்புகள். ஏற்கனவே எஸ்பி வேலுமணி கொங்கு மண்டலத்தில் தேர்தல் வேலைகளை துவக்கி விட்ட நிலையில் அதைவிட ஒரு படி முன்னதாக பல்வேறு மாநாடுகளையும் அங்கே நடத்திவிட்டார் செந்தில் பாலாஜி. இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையனக்கு கோவை ஈரோடு பகுதிகளில் நேற்று பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொங்கு மண்டலம்
ஒட்டுமொத்தமாக விஜய் ரசிகர்கள் திரண்டு வந்து செங்கோட்டையனை வரவேற்றது தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் ஒரு மந்தையிலிருந்து பிரிந்த மூன்று ஆடுகள் போல அதிமுகவில் மிகப் பிரபலமாக இருந்த எஸ்பி வேலுமணி, செந்தில் பாலாஜி, செங்கோட்டையன் ஆகியோர் 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர் எதிர் அணியில் இருக்கின்றனர். இதில் கொங்கு மண்டலத்தில் வெற்றியை சுவைக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications