கோவை செல்வராஜ் எந்தக் கட்சி.. அதிமுக என்றால் நாங்கள் தான்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!
சென்னை: தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் கோவை செல்வராஜ் எந்தக் கட்சி சார்பாக கலந்துகொண்டார் என்று தெரியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது. 2023 மார்ச் 31ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இதற்கென 6 பி என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி தமிழக தேர்தல் ஆணையம் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளுடனான தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோவை செல்வராஜூம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஜெயக்குமார் வந்தபோது, அதிமுக பெயர்ப்பலகை முன்னிலையில் 3 இருக்கைகள் போடப்பட்டிருந்தது. அதில் ஒரு இருக்கையில் கோவை செல்வராஜ் அமர்ந்திருந்தார். அவர் முன் அதிமுக பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது. அப்போது வந்த ஜெயக்குமார், இருக்கையில் அமர்வதற்கு முன் பெயர்ப்பலகையை கையில் எடுத்து நைசாக தன் பக்கத்தில் வைத்துக்கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கோவை செல்வராஜ் அமைதியாக அமர்ந்திருந்ததால், எவ்வித சலசலப்பும் ஏற்படவில்லை.
தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர் நீக்கம், ஒரே நபருக்கு இரு வாக்குகள் என பல்வேறு குளறுபடிகள் இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க வலியுறுத்தினோம். இதனால் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆதரவளித்தோம்.
அதிமுக சார்பாக பொன்னாச்சி ஜெயராமனும், நானும் மட்டுமே பங்கேற்றோம். கோவை செல்வராஜ் எந்தக் கட்சி சார்பாக பங்கேற்றார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
இன்றே கடைசி.. கடையை மூடும் தேர்தல் ஆணையம்! 2026ல் ஓட்டுப் போட முடியாது? என்ன செய்ய வேண்டும்? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications