பெண்கள் விவகாரத்தில் சிறையில் இருக்க வேண்டியவர் ஜெயக்குமார்! கோவை செல்வராஜூக்கு வந்தது பாருங்க கோபம்
சென்னை: பெண்கள் தொடர்பான வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்க வேண்டியவர் ஜெயக்குமார் என அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் ஆவேசம் காட்டியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி பேசுவதற்கு ஜெயக்குமாருக்கு என்ன தகுதி இருக்கிறது என அவர் வினவியுள்ளார்.
ஓபிஎஸ் ஸை பற்றி பேசுவதை ஜெயக்குமார் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவருக்கு கடுமையான முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளார் கோவை செல்வராஜ்.

கோவை செல்வராஜ்
ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகிய இருவரையும் கோமாளிகள் என்றும் ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி பேசுவதை ஜெயக்குமார் நிறுத்தாவிட்டால் நடப்பதே வேறாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், உதவிக் கேட்டு வரும் பெண்களை மானப்பங்கப் படுத்தியதற்காக ஜெயக்குமார் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் இருக்க வேண்டியவர் எனக் கூறி கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் கோவை செல்வராஜ்.

கடும் எச்சரிக்கை
அன்று ஆட்சியும் அதிகாரமும் கையில் இருந்ததால் ஜெயக்குமாரை எதிர்த்து பெண்கள் புகார் கொடுக்க அஞ்சினார்கள் என்றும் ஆனால் இன்று அவரால் பாதிக்கப்பட்ட பெண்களை புகார் கொடுக்க வைத்தால் வழக்குப் பதியப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார் எனவும் சற்று கடுமையாகவே ஜெயக்குமாருக்கு எதிராக ஆக்ரோஷம் காட்டினார் கோவை செல்வராஜ். அதிமுக செய்தித் தொடர்பாளர் ஒருவரே அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரை இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

மொட்டைக் கடிதம்
ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என தனக்கு கடிதம் வந்துள்ளதாகவும் ஆனால் யாருடைய கையெழுத்தும் இல்லாமல் மொட்டைக் கடிதமாக வந்திருப்பதால் அது உண்மையிலேயே தலைமைக் கழகத்தில் இருந்து தான் வந்ததா அல்லது வேறு யாரேனும் அனுப்பினார்களா என சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார். இதனால் அந்த பொதுக்குழுவுக்கு தாம் செல்ல மாட்டேன் எனக் கூறினார்.
Recommended Video

டிராமா போடுகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி ஒன்றும் தெரியாததை போல் டிராமா போட்டு வருகிறார் என்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான துரோகத்திற்கும் சதிக்கும் மூலக்காரணமே அவர் தான் எனவும் கோவை செல்வராஜ் வசைபாடினார். இதனிடையே இதே கோவை செல்வராஜ் ஒரு காலத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் மிகுந்த நெருக்கம் காட்டியவர் என்பதும் ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து விலகி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிலைப்பாடு எடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications