மு.க.ஸ்டாலின் அரசுடன் இணைந்து செயல்படுவோம்.. வாருங்கள்.. குஷ்பு அழைப்பு!
சென்னை: கோவிட் ஒழிப்புப் போரில் தமிழக அரசுடன் இணைந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனிடம் தோல்வியுற்றார் குஷ்பு. இருப்பினும் தேர்தலில் வென்ற திமுகவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது அரசுடன் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் குஷ்பு. இதுதொடர்பாக அவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்..
அதில், தமிழக மக்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து இணைந்து செயல்பட வேண்டும். கொரோனோவுக்கு எதிரான போரில் அரசால் மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. மக்களின் பங்கும் முக்கியமானது. நம்மால் முடிந்த ஒத்துழைப்பை நாம் அளிப்போம். சிறு துளி பெருவெள்ளமாகும் என்று கும்பிட்ட கை போட்ட ஸ்மைலியுடன் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
I urge people of TN to please help the Govt of Shri @mkstalin Avl to fight #covid19 Remember it cannot be done alone by the govt, we play a vital role too. Let's do our bit. Every drop makes an ocean. 🙏🙏🙏
— KhushbuSundar ❤️ (@khushsundar) May 8, 2021
ஒரு பக்கம் பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், அரசை நக்கலடித்துக் கொண்டுள்ள நிலையில், குஷ்புவின் இந்த பொறுப்பான ட்வீட் அனைவரது பாராட்டுக்களையும் கவர்ந்துள்ளது. பொறுப்பான முறையில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள குஷ்புவை பாராட்டுவதாக பலரும் அவரது ட்வீட்டில் வந்து கூறிக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications