பஸ் எங்கேன்னு கேட்டோம்.. அதுக்கு போய் அடிக்கிறாங்க.. கோயம்பேட்டில் மக்கள் மீது போலீஸ் தடியடி
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது.
இந்த நிலையில் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் பல்வேறு நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றனர். ஆனால் போதிய பேருந்து இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

கோயம்பேடு எப்படி
இந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் பேருந்து இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளானார்கள். பொதுவாகவே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று தேர்தல் காரணமாக நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டம் இன்னும் அதிகம் ஆனது.

பேருந்து இல்லை
இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் இரவு முழுக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. காலை 3 மணி வரை இளைஞர்கள், பெண்கள் என்று பலர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்து இருந்தனர். ஆனால் பல ஊர்களுக்கு காலை 5 மணி வரை கூட பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது.

லத்தியால் தாக்கினார்கள்
இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து எப்போது வரும் என்று கேட்டு அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் இளைஞர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதனால் கோபம் அடைந்த போலீசார் அங்கிருந்த மக்கள் மீது லத்தியால் தாக்கி தடியடி நடத்தினார்கள்.

மனித தன்மை இல்லை
தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற சென்று மக்கள் மீது போலீசார் கொஞ்சமும் மனித தன்மை இல்லாமல் தாக்குதல் நடத்தியதாக மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். போதிய பேருந்துகளை ஏற்பாடு செய்யாதது அரசின் தவறு. அதற்கு மக்கள் மீது தடியடி நடத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications