காங்கிரஸில் அடுத்த விக்கெட் காலி... கட்சி தாவுகிறாரா அப்சரா ரெட்டி... காரணம் என்ன..?
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து நடிகை குஷ்பு விலகியுள்ள நிலையில் மேலும் ஒருவர் அங்கிருந்து விலகும் முடிவில் உள்ளார்.
மகிளா காங்கிரஸ் தேசியச்செயலாளராக உள்ள அப்சரா ரெட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
இதற்கு காரணம் எந்த கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அழகிரி அழைப்பு விடுப்பதில்லை என்றும் குறைந்தபட்சம் தமிழக காங்கிரஸ் சார்பில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்ற தகவலை கூட அழகிரி அளிப்பதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்சி நிகழ்ச்சிகள்
அண்மையில் மறைந்த வசந்தகுமாருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற போது அது குறித்த தகவலை தேசிய செய்தித் தொடர்பாளரான தனக்கு தெரியப்படுத்தவில்லை என ட்விட்டரில் ஆதங்கம் தெரிவித்திருந்தார் குஷ்பு. இப்போதும் அதேபோன்று ஆதங்கக்குரல்கள் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

அழைப்பில்லை
கடந்த 11-ம் தேதி திருவண்ணாமலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்பட்ட புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான கண்டன மாநாட்டிற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே இது தொடர்பாக மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளர் அப்சரா ரெட்டியை ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது;

தகவல் இல்லை
''நான் ராகுல்காந்தியை நம்பி காங்கிரஸில் இணைந்தேன். நான் மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளராக எனது பணிகளை இந்திய அளவில் செய்து வருகிறேன். பல மாநிலங்களில் இருந்தும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம் என்ற தகவலை கூட தெரியப்படுத்துவதில்லை. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.''

குறை சொல்லமாட்டேன்
''இதற்கு முன் திருநாவுக்கரசர் தலைவராக இருந்த போது கட்சி சார்பான நிகழ்ச்சிகள் பற்றி குறுஞ்செய்தி மூலமோ, அலைபேசி மூலமோ சத்தியமூர்த்தி பவன் ஊழியர்கள் முன் கூட்டியே தெரிவிப்பார்கள். இப்போது அந்த வழக்கம் கடைபிடிக்கப்படுவதில்லை. இங்கிருக்கும் ஒரு சிலர் செய்யும் தவறுகளால் காங்கிரஸில் உள்ள அனைவரையும் குறை சொல்லமாட்டேன்'' என்று கூறினார்.
இதன் மூலம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது அப்சரா ரெட்டி அதிருப்தியில் இருப்பதை உணர முடிகிறது. குஷ்புவை போல் இவரும் கட்சி தாவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications