தனியார் பள்ளிகளில் தான் அதிக தற்கொலை! காரணம் என்ன தெரியுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன விளக்கம்!
சென்னை : அதிகம் தனியார் பள்ளி மாணவர்கள் தான் தற்கொலை சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் எனவும், அதிக அழுத்தம் கொடுத்து அதிக மதிப்பெண் பெற வைத்து பள்ளியை பேனர் வைத்து விளம்பரபடுத்துவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த்ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில், பள்ளி கல்வித்துறையில் மாணவர்களின் நலன் குறித்தும், மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அமைச்சர் அன்பில் மகேஷ்
கடந்த சில வாரங்களில் தஞ்சை, நெல்லை, கோவை, வேலூர் ஆகிய மண்டலங்களில் ஆய்வுக் கூட்டம் முடிவடைந்த நிலையில் சென்னை மண்டலத்தில் இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் ,"தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும், தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியரை அழைத்து கலந்தாய்வு நடத்த அறிவுறுத்தினார்.

போதிய நடவடிக்கை
மாணவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உடற்கல்வி நேரத்தை தவிர்க்காமல் விளையாட வைக்கப்படுகிறார்களா என கண்காணிக்க வேண்டும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உருவாக்கும் வகையில் ஊக்குவிக்கும் பேச்சாளர்களை பேச வைக்க வேண்டும், சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ள பள்ளிகள் மாநகராட்சியோடு இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தனியார் பள்ளிகளில் தற்கொலை
ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பள்ளி கட்டமைப்பை சீரமைக்க 400 கோடி ஒதுக்கி மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதிகம் தனியார் பள்ளி மாணவர்கள் தான் தற்கொலை சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். அதிக அழுத்தம் கொடுத்து அதிக மதிப்பெண் பெற வைத்து, பள்ளியை பேனர் வைத்து விளம்பரபடுத்துவதால் தான் இது போன்று ஏற்படுகிறது.

மாணவர்களுடன் சந்திப்பு
பள்ளி மாணவர்களிடம் திடீரென சென்று பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் சென்று பேசுங்கள். அதை வைத்து கலந்தாலோசிக்க வேண்டும். மாணவர்களின் விவரங்களை முழுமையாக சேகரிக்க வேண்டும். அதிக ஆய்வுகளை பள்ளிகளில் மேற்கொள்ளுங்கள்" என பேசினார்.












Click it and Unblock the Notifications