"உதயநிதி ஸ்டாலின் போலித்தனத்தின் உச்சம்.. இனியாவது தொண்டர்கள் கவனமா இருங்க": அமைச்சர் பாண்டியராஜன்
உதயநிதி ஸ்டாலின் போலித்தனத்தின் உச்சம் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
சென்னை: "உதயநிதி ஸ்டாலின் போலித்தனத்தின் உச்சம்.. இதுவரை விநாயகர் சதுர்த்திக்கு யாரும் திமுகவில் வாழ்த்து சொல்லவில்லை... இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக் கூடாது, தேசிய கொடியை ஏற்றக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு.. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்ததன் காரணமாகவே உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவிட்டார்" " என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மீது சில தினங்களுக்கு முன்பு ஒரு வழக்கு பதிவானது.. அதாவது "அறிவாலயத்தில் கொடி ஏற்றும்போதும், இறக்கும்போதும், ஸ்டாலின் மரியாதை செலுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை... கையில் கிளவுஸ் போட்டிருந்தார்.
தேசிய கொடியை ஏற்றிய பிறகு அதற்கு மரியாதை செலுத்தாமலும், வணக்கம் செலுத்தாமலும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார்" என்று கமிஷனர் ஆபீசில் புகார் தரப்பட்டது.. இந்த புகாரை தந்தது அதிமுக செய்தி தொடர்பாளர் ஆர்எம் பாபு முருகவேல்!

விஜயகாந்த்
இது தொடர்பாக நேற்று முன்தினம் பிரேமலதா விஜயகாந்த்தும் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.. "ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதுகூட தெரியவில்லை.. ஸ்டாலின் செல்வது சரியா? இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

சுதந்தி தினம்
இதே பிரச்சனையை மறுபடியும் அதிமுக அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கிளப்பி உள்ளார்.. இதை பற்றி செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்த வருஷம் அதிசயமாக சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கொடியேற்றினார்... கொடியேற்றியதும் கொடிக்கு சல்யூட் வைக்க வேண்டும் என்பது மரபு.

அவமதிப்பு
ஆனால், ஸ்டாலின் கொடியேற்றிவிட்டு அப்படியே போய்விட்டார். தேசியக் கொடிக்கு மிகப்பெரிய அவமானம் இழைக்கப்பட்டிருக்கிறது... இதுவரை திமுக அலுவலகத்தில் தேசிய கொடி ஏத்தினதே இல்லை... எனக்கு தெரிந்து ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி நான் பார்த்ததும் இல்லை... அவர் ஸ்கூல் படித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்பதால், தேசியக் கொடி பற்றிய புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம்... அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா, அதனை காவல் துறை மேற்கொள்ளும்" என்றார்.

பண்டிகைகள்
உதயநிதி ஸ்டாலின் டிவிட்டர் பதிவு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "உதயநிதி ஸ்டாலின் போலித்தனத்தின் உச்சம்.. இதுவரை விநாயகர் சதுர்த்திக்கு யாரும் திமுகவில் வாழ்த்து சொல்லவில்லை... இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக் கூடாது, தேசிய கொடியை ஏற்றக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு.. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்ததன் காரணமாகவே உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவிட்டார்.. திமுகவில் குடும்ப அரசியல் நடைபெறுகிறது.. இனியாவது தொண்டர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்" என்றார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications