"உதயநிதி ஸ்டாலின் போலித்தனத்தின் உச்சம்.. இனியாவது தொண்டர்கள் கவனமா இருங்க": அமைச்சர் பாண்டியராஜன்
உதயநிதி ஸ்டாலின் போலித்தனத்தின் உச்சம் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
சென்னை: "உதயநிதி ஸ்டாலின் போலித்தனத்தின் உச்சம்.. இதுவரை விநாயகர் சதுர்த்திக்கு யாரும் திமுகவில் வாழ்த்து சொல்லவில்லை... இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக் கூடாது, தேசிய கொடியை ஏற்றக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு.. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்ததன் காரணமாகவே உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவிட்டார்" " என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மீது சில தினங்களுக்கு முன்பு ஒரு வழக்கு பதிவானது.. அதாவது "அறிவாலயத்தில் கொடி ஏற்றும்போதும், இறக்கும்போதும், ஸ்டாலின் மரியாதை செலுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை... கையில் கிளவுஸ் போட்டிருந்தார்.
தேசிய கொடியை ஏற்றிய பிறகு அதற்கு மரியாதை செலுத்தாமலும், வணக்கம் செலுத்தாமலும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார்" என்று கமிஷனர் ஆபீசில் புகார் தரப்பட்டது.. இந்த புகாரை தந்தது அதிமுக செய்தி தொடர்பாளர் ஆர்எம் பாபு முருகவேல்!

விஜயகாந்த்
இது தொடர்பாக நேற்று முன்தினம் பிரேமலதா விஜயகாந்த்தும் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.. "ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதுகூட தெரியவில்லை.. ஸ்டாலின் செல்வது சரியா? இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

சுதந்தி தினம்
இதே பிரச்சனையை மறுபடியும் அதிமுக அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கிளப்பி உள்ளார்.. இதை பற்றி செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்த வருஷம் அதிசயமாக சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கொடியேற்றினார்... கொடியேற்றியதும் கொடிக்கு சல்யூட் வைக்க வேண்டும் என்பது மரபு.

அவமதிப்பு
ஆனால், ஸ்டாலின் கொடியேற்றிவிட்டு அப்படியே போய்விட்டார். தேசியக் கொடிக்கு மிகப்பெரிய அவமானம் இழைக்கப்பட்டிருக்கிறது... இதுவரை திமுக அலுவலகத்தில் தேசிய கொடி ஏத்தினதே இல்லை... எனக்கு தெரிந்து ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி நான் பார்த்ததும் இல்லை... அவர் ஸ்கூல் படித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்பதால், தேசியக் கொடி பற்றிய புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம்... அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா, அதனை காவல் துறை மேற்கொள்ளும்" என்றார்.

பண்டிகைகள்
உதயநிதி ஸ்டாலின் டிவிட்டர் பதிவு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "உதயநிதி ஸ்டாலின் போலித்தனத்தின் உச்சம்.. இதுவரை விநாயகர் சதுர்த்திக்கு யாரும் திமுகவில் வாழ்த்து சொல்லவில்லை... இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக் கூடாது, தேசிய கொடியை ஏற்றக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு.. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்ததன் காரணமாகவே உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவிட்டார்.. திமுகவில் குடும்ப அரசியல் நடைபெறுகிறது.. இனியாவது தொண்டர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்" என்றார்.
-
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்!












Click it and Unblock the Notifications