"எங்கு பார்த்தாலும் வடமாநிலத்தவர்.. ரொம்ப வருத்தமா இருக்கு.." மாணவர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி!
சென்னை : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மட்டுமே தமிழ்நாட்டு மாணவர்கள் ஆர்வம் காட்டுவதும், மத்திய அரசு வேலைவாய்ப்புகளுக்கான யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதும் மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய செய்தி என தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டு மாணவர்கள் மத்திய அரசு பணிகளில் ஆர்வம் காட்டாததே மத்திய அரசு அலுவலகங்களில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாகப் பணிபுரிவதற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த விழாவில் மாணவர்களுக்கான சிறப்புக் கையேடுகள் வழங்கப்பட்டன.

ஐடிஐ - திமுக ஆட்சியில் சாதனை
பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சுதந்திரம் அடைந்து இந்த நாள் வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு ஐ.டி.ஐக்களின் எண்ணிக்கை 91 மட்டுமே. கடந்த ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 11 புதிய ஐ.டி.ஐ.க்களை துவங்கியுள்ளோம். மேலைநாடுகளில் தரப்படும் கல்வியைப் போன்று தமிழ்நாட்டு மாணவர்கள் பெறும் வகையில் டாடா கன்சல்டன்சிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஐ.டி.ஐ.க்கும் 30 கோடிக்கும் மேல் ஒதுக்கீடு செய்து அந்த ஐ.டி.ஐ.க்களை தரம் உயர்த்த 2800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஐ.டி.ஐ.க்களில் இந்தாண்டு சேர்க்கை 94 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்நாட்டில் இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்று உயரிய நிலையை அடைவதை இலக்காகக் கொண்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முதலாவதாக, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள மாநிலக் கல்லூரியில் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி மையம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில்
தமிழ்நாட்டு மாணவ மாணவிகள், இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2 தேர்வுகளில் காட்டும் ஆர்வத்தை மத்திய அரசு வேலைவாய்ப்புகளுக்கான யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் காட்டுவதில்லை. இது மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய செய்தி. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 2.1% பேர் தான் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.

வருத்தமளிக்கும் செய்தி
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர்கள் பணிபுரிவதை விட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாகப் பணிபுரிவதற்கு இதுவும் ஒரு காரணம். இது உண்மையிலேயே வருத்தமளிக்கக்கூடிய ஒன்று. இதனை நாம் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்கிற நோக்கில் மத்திய அரசுப் பணிகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் போட்டித்தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை அரசு துவங்குகிறது.

அதிக முக்கியத்துவம்
இரயில்வே மற்றும் வங்கி போன்ற மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்வதற்கு ஏதுவாக போட்டித் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். மாணவர்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளுடன் வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications