3வது கணவனுக்கு.. ராத்திரி 12 மணிக்கு வந்த டவுட்.. "நீ கற்புக்கரசியாக இருந்தால்".. மனைவியின் பகீர்
பெற்ற மகளை தீ வைத்து கொளுத்திய தாய் கைதாகி உள்ளார்
சென்னை: "நீ நிஜமாகவே கற்புக்கரசியாக இருந்தால், இந்த காரியத்தை செய்" என்று கணவன் உத்தரவிடவும், அதை அப்படியே வழிமொழிந்து செய்துவிட்டார் மனைவி..!
சென்னை திருவொற்றியூர் பத்மநாபா காலனியை சேர்ந்தவர் பத்மநாபன்..41 வயதாகிறது.. இவர் ஐஓசியில் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டி வருகிறார்.
மனைவி பெயர் ஜெயலட்சுமி.. 38 வயதாகிறது.. கடந்த 2014ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.. ஆனால், ஜெயலட்சுமிக்கு இது 2வது திருமணம்.

கருத்து வேறுபாடு
முதல் கணவர் பெயர் பால்வண்ணன்.. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.. இதனால் ஜெயலஷ்மி பால்வண்ணன் தம்பியான துரைராஜ் என்பவரை 2வதாக கல்யாணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு பவித்ரா என்ற பெண் குழந்தை இருக்கிறாள். பவித்ராவுக்கு 13 வயதாகிறது.. இதற்குள் 3வதாக பத்மநாபன் என்பரை திருமணம் செய்து கொண்டார் ஜெயலட்சுமி, இப்போது, பத்மநாபன், ஜெயலட்சுமி, பவித்ரா 3 பேருமே ஒன்றாக வசித்து வருகிறார்கள்..

கற்புக்கரசி
இப்படிப்பட்ட சூழலில்தான், 3வது கணவன் பத்மநாபனுக்கு ஜெயலட்சுமியின் நடத்தை மீது திடீரென சந்தேகம் வந்துவிட்டது.. அதுவும் நேற்று ராத்திரி 12 மணிக்கு சந்தேகம் வந்துள்ளது.. இது தொடர்பாக இருவருக்குள்ளும் சண்டையும் ஏற்பட்டுள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமுற்ற பத்மநாதன், ஜெயலட்சுமியிடம், "நீ நிஜமாகவே கற்புக்கரசியாக இருந்தால், பவித்ராவை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்து" என்று சொல்லியுள்ளார்.

ஜெயலட்சுமி
தகராறில் கொந்தளித்து போயிருந்த ஜெயலட்சுமியும், தூங்கி கொண்டிருந்த பவித்ரா மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டார்.. இதனால் அலறி துடித்துள்ளார் பவித்ரா.. அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து, பதறிபோய், இதுதொடர்பாக திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் போலீசாரும் உடனடியாக வந்து பவித்ராவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்பதால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்..

விசாரணை
அங்கேயும் சிக்கல் வரவும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.. இவ்வளவும் நடந்து முடிப்பதற்குள் பவித்ராவுக்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு விட்டது.. இப்போது சீரியஸாக இருக்கிறாள் பவித்ரா.. கவலைக்கிடமான நிலையில் பவித்ரா சிகிச்சை பெற்று வரும் நிலையில், திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.. முதல் வேலையாக, மகளை தீ வைத்து கொளுத்திய பெற்ற தாயையும், 3வதாக வாக்கப்பட்ட பத்மநாபனையும் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications