மேற்கு வங்க மாணவி பாலியல் வன்கொடுமை.. ஐஐடி இயக்குநருக்கு நோட்டீஸ்.. பேராசிரியர்கள் முன் ஜாமீன் மனு
சென்னை: மேற்கு வங்க மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் பேராசிரியர்கள் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஐஐடியின் இயக்குநருக்கும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் விளக்கம் கேட்டு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பட்டியலின மாணவி தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரை அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதனால் 8 பேரை கைது செய்ய போலீஸார் தனிப்படை அமைக்கப்பட்டு ஒரு தனிப்படை மேற்கு வங்கம் சென்று சென்னை ஐஐடி முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்சோ தெப்சர்மாவை கொல்கத்தாவில் வைத்து கைது செய்தனர்.
இவர் ஏற்கெனவே முன் ஜாமீன் பெற்றிருந்ததால் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் மேற்கு வங்க மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை ஐஐடி இயக்குநருக்கு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல் ஆணையம், மாவட்ட ஆட்சியர் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை ஐஐடி பேராசிரியர்கள் ஜி எட்மன் பிரசாத், ரமேஷ் எல் கர்தாசின் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications