அரசியல் தலையீடு இருக்காது.. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி.. அடுத்த வாரமே சீறிய போலீசின் தோட்டா..!
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் காவல்துறையினர் அரசியல் தலையீடு இல்லாமல் தங்கள் பணிகளை சிறப்பாக செய்யலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் அடுத்த வாரமே நீராவி முருகன் என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் இன்று பெரும் பேசு பொருளாகியிருக்கிறது 60க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல ரவிடியான நீராவி முருகனின் என்கவுண்டர் சம்பவம்.
திண்டுக்கல் அருகே நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக நீராவி முருகனை விசாரிக்க சென்ற திண்டுக்கல் தனிப்படை எஸ்.ஐ. இசக்கி ராஜா தலைமையிலான போலீசாரை நீராவி முருகன் தாக்கியதாகவும், தற்காப்புக்காக முருகனை என்கவுண்டர் செய்ததாகவும் கூறுகிறது போலீசார் தரப்பு..

நீராவி முருகன் என்கவுண்டர்
நாங்குநேரி பகுதியில் ரவுடி முருகன் பதுங்கி இருப்பதை அறிந்து போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடி முருகன் போலீசாரை அரிவாளால் வெட்டி தப்பமுயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரவுடி முருகனை சுற்றி வளைத்த போலீசார் என்கவுன்டர் செய்தது தெரியவந்துள்ளது. காயமடைந்த எச்.ஐ இசக்கிராஜாவிடம் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் களக்காடு காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் அதிகாரிகள் மாநாடு
இந்நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் காவல்துறையினர் அரசியல் தலையீடு இல்லாமல் தங்கள் பணிகளை சிறப்பாக செய்யலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் அடுத்த வாரமே நீராவி முருகன் என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 10ஆம் தேதி கூடியது.

முதல்வர் ஸ்டாலின்
இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலில் இருந்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்கண்காணிப்பாளர்கள், டிஜிபி, ஐஜி, டிஐஜி உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் அதிகமாக காவல்துறையினர் அழித்த தகவல்களை மிகவும் பொறுமையாக கேட்டு அறிந்த முதல்வர் ஸ்டாலினிடம் தங்கள் தரப்பில் இருக்கும் குறைகளை அதிகாரிகள் கூறியுள்ளனர் குறிப்பாக காவல் நிலையங்களில் குற்றச் சம்பவங்களில் நடவடிக்கை எடுக்கும் போது தரப்படும் அரசியல் அழுத்தம் குறித்து முதல்வர் ஸ்டாலின் போலீசார் கூறியுள்ளனர்.

போலீசாருக்கு உறுதி
இதனை கவனத்துடன் பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், ரவுடிகள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், குற்றங்களின் விழுக்காட்டை குறைப்பதற்கு பதில் குற்றமே நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை மட்டும் பெற்றுத்தரும் துறையாக இல்லாமல், குற்றமே நடக்காமல் காவல்துறை தடுக்க வேண்டும் என பேசினார். மேலும் யாராக இருந்தாலும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் தலையிடக் கூடாது என்றும், அரசியல் அழுத்தங்கள் இல்லாமல் போலிசார் பணியாற்றலாம் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் கூட்டம் நடந்த அடுத்த வாரமே நீராவி முருகன் என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications