அரசியல் தலையீடு இருக்காது.. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி.. அடுத்த வாரமே சீறிய போலீசின் தோட்டா..!
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் காவல்துறையினர் அரசியல் தலையீடு இல்லாமல் தங்கள் பணிகளை சிறப்பாக செய்யலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் அடுத்த வாரமே நீராவி முருகன் என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் இன்று பெரும் பேசு பொருளாகியிருக்கிறது 60க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல ரவிடியான நீராவி முருகனின் என்கவுண்டர் சம்பவம்.
திண்டுக்கல் அருகே நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக நீராவி முருகனை விசாரிக்க சென்ற திண்டுக்கல் தனிப்படை எஸ்.ஐ. இசக்கி ராஜா தலைமையிலான போலீசாரை நீராவி முருகன் தாக்கியதாகவும், தற்காப்புக்காக முருகனை என்கவுண்டர் செய்ததாகவும் கூறுகிறது போலீசார் தரப்பு..

நீராவி முருகன் என்கவுண்டர்
நாங்குநேரி பகுதியில் ரவுடி முருகன் பதுங்கி இருப்பதை அறிந்து போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடி முருகன் போலீசாரை அரிவாளால் வெட்டி தப்பமுயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரவுடி முருகனை சுற்றி வளைத்த போலீசார் என்கவுன்டர் செய்தது தெரியவந்துள்ளது. காயமடைந்த எச்.ஐ இசக்கிராஜாவிடம் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் களக்காடு காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் அதிகாரிகள் மாநாடு
இந்நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் காவல்துறையினர் அரசியல் தலையீடு இல்லாமல் தங்கள் பணிகளை சிறப்பாக செய்யலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் அடுத்த வாரமே நீராவி முருகன் என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 10ஆம் தேதி கூடியது.

முதல்வர் ஸ்டாலின்
இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலில் இருந்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்கண்காணிப்பாளர்கள், டிஜிபி, ஐஜி, டிஐஜி உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் அதிகமாக காவல்துறையினர் அழித்த தகவல்களை மிகவும் பொறுமையாக கேட்டு அறிந்த முதல்வர் ஸ்டாலினிடம் தங்கள் தரப்பில் இருக்கும் குறைகளை அதிகாரிகள் கூறியுள்ளனர் குறிப்பாக காவல் நிலையங்களில் குற்றச் சம்பவங்களில் நடவடிக்கை எடுக்கும் போது தரப்படும் அரசியல் அழுத்தம் குறித்து முதல்வர் ஸ்டாலின் போலீசார் கூறியுள்ளனர்.

போலீசாருக்கு உறுதி
இதனை கவனத்துடன் பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், ரவுடிகள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், குற்றங்களின் விழுக்காட்டை குறைப்பதற்கு பதில் குற்றமே நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை மட்டும் பெற்றுத்தரும் துறையாக இல்லாமல், குற்றமே நடக்காமல் காவல்துறை தடுக்க வேண்டும் என பேசினார். மேலும் யாராக இருந்தாலும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் தலையிடக் கூடாது என்றும், அரசியல் அழுத்தங்கள் இல்லாமல் போலிசார் பணியாற்றலாம் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் கூட்டம் நடந்த அடுத்த வாரமே நீராவி முருகன் என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications