Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிச்சிருக்கீங்களா? முதலில் இதை படியுங்க.. வெளியான குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கார்டு கேட்டு 2.44 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு ஜூலை முதல் புதிதாக ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 குடும்ப அட்டைகள் உள்ளன. ரேஷன் கார்டு என்பது வெறும் பொருட்கள் வாங்க பயன்படும் அட்டையாக மட்டுமின்றி, தமிழக அரசின் பல்வேறு சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டையாகவும் உள்ளது. குறிப்பாக தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு இந்த குடும்ப அட்டைகளே முக்கிய பங்காற்றுகின்றன.

New ration cards will be issued after Lok Sabha Election 2024 results says TN officials

வெள்ள நிவாரணம், கொரோனா நிவாரணம், பொங்கல் தொகுப்பு மற்றும் மகளிர் உரிமைத்தொகை ஆகியவை ரேஷன் கார்டு அடிப்படையில்தான் கணக்கெடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது. வருவாய் துறை வழங்கும் சான்றிதழ்களுக்கு ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளதால், முகவரி சான்றாக ரேஷன் கார்டு தான் பார்க்கப்படுகிறது.

ரேஷன் கார்டுகளை பொறுத்தவரை கடந்த 2017ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் கார்டாக மாறிவிட்டது. செல்போன் நம்பருடன் ரேஷன் கார்டு இணைக்கப்பட்டது. ரேஷன் கார்டுகளுடன் செல்போன் எண்களும் இணைக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் ரேஷன் கார்டு அடிப்படையிலேயே குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படுகிறது.

மகளிர் உரிமை தொகை ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் காரணமாக புதிய ஸ்மார்ட் கார்டுக்கு பலரும் விண்ணப்பிக்க தொடங்கினர். அதனால் புதிய கார்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி நடந்தது.

ரயில் பெட்டிக்குள் பெய்த மழை.. கன்னியாகுமரி சூப்பர் பாஸ்டில் இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த பயணிகள்


கடந்த ஓராண்டில் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜூலை முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டை இன்னும் வழங்கப்படாத நிலையில், லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விடாத காவல்துறை.. நெல்லையில் சீட் பெல்ட் போடாத அரசு பஸ் டிரைவர்களை மடக்கி ஃபைன் போட்ட போலீசார்


இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "புதிதாக ரேஷன் அட்டை பெற சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். இவர்களில் தகுதியானவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்ட பின்னர் ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான பணிகள் தொடங்கும்” என்று கூறியுள்ளனர்.

இதன்படி பார்த்தால் அடுத்த மாதம் புதிய ரேஷன் கார்டுகள் ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால், புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+