செங்கல்பட்டு, விழுப்புரம் மக்கள் உஷார்... அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை
சென்னை : வடகிழக்கு பருவக் காற்று காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் மழை பெய்யும் இடங்கள் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
Recommended Video
இன்னிலையில் இன்று அடுத்த 2 மணிநேரத்திற்கு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

வடகிழக்கு பருவக் காற்று காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்து 5 நாட்களுக்கு மழை பெய்யும் இடங்கள் குறித்த அறிவிப்பை இன்று காலை வெளியிட்டிருந்தது. டிசம்பர் 11 ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் எங்கெங்கு மழை பெய்யும் என்பதை தெரிவித்திருந்தது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாலை 3.50 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications