Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”திமுக ஆட்சியில் உருப்படியான திட்டம் எதுவும் இல்லை” காலை சிற்றுண்டி திட்டம் குறித்து ஜெயக்குமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியில் திட்டத்திற்கு பெயர் வைக்கும் பணிகள் மட்டுமே நடப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாதுரையின்114-வது பிறந்தநாள் விழாவையொட்டி இன்று வாலாஜா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பாமர மக்களும் ரசியலில் நிர்வாகத்திற்கு வர முடியும் என்று அனைவருக்கும் நிரூபித்து காட்டியவர். அரசியலில் சகிப்புத்தன்மை வேண்டும் என்று அண்ணா கூறினார். ஆனால் அதற்கு மாறாக எதிர்க்கட்சிகளை ஒடுக்க வேண்டும் என்ற நாகரீகமற்ற அரசியல் திமுக எடுத்து செல்கிறது.

உருப்படியாக திட்டம் கிடையாது

உருப்படியாக திட்டம் கிடையாது

அண்ணாவின் வழியில் வந்தோம் என்று சொல்வதற்கு திமுகவுக்கு அருகதை கிடையாது. திமுக ஆட்சியில் உருப்படியான திட்டம் கிடையாது. ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால், அதற்கு பெயர் சூட்டும் விழாவை திமுக பிரமாதமாக நடத்தும். அதற்கு காரணம் தலைமைச் செயலாளர் இறையன்பு. அவர் எழுதிக் கொடுப்பதை தான் முதலமைச்சர் படித்து வருகிறார்.

வாக்குறுதிகள் என்ன ஆனது?

வாக்குறுதிகள் என்ன ஆனது?

காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முழுமையாக சாப்பிடாமல் கைகளை கழுவினார். அவர்கள் திட்டத்திற்கு பெயர் வைக்கும் வேலையை மட்டும் செய்கிறார்களே தவிர, ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் வழங்கிய மகளிருக்கான உரிமைத் தொகை, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட வாக்குறுதிகள் என்ன ஆனது. இதுநாள் வரை நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற முடியவில்லை என்று விமர்சித்தார்.

சசிகலா பற்றி கருத்து

சசிகலா பற்றி கருத்து

தொடர்ந்து, பண்ருட்டி ராமச்சந்திரனை யார் வேண்டுமானாலும் சென்று சந்திக்கலாம். அதனால் என்ன நடக்கிறது என்பது தான் முக்கியம். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கட்டுப்பாட்டில் கம்பீரமாக செயல்படுகிறது. சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவாக தன்னை பார்ப்பதாக சசிகலா பேசுவது மலைக்கும், மடுவுக்கான வித்தியாசம் என்று குற்றம்சாட்டினார்.

விளம்பரப் பிரியர்கள்

விளம்பரப் பிரியர்கள்

மேலும், திமுக அரசில் இருவர் விளம்பரத்தில் கெட்டிக்காரர்கள். ஒருவர் முதல்வர் ஸ்டாலின், இன்னொருவர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். மருத்துவத்துறையில் ஏராளமான பிரச்னைகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+