”திமுக ஆட்சியில் உருப்படியான திட்டம் எதுவும் இல்லை” காலை சிற்றுண்டி திட்டம் குறித்து ஜெயக்குமார்!
சென்னை: திமுக ஆட்சியில் திட்டத்திற்கு பெயர் வைக்கும் பணிகள் மட்டுமே நடப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாதுரையின்114-வது பிறந்தநாள் விழாவையொட்டி இன்று வாலாஜா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பாமர மக்களும் ரசியலில் நிர்வாகத்திற்கு வர முடியும் என்று அனைவருக்கும் நிரூபித்து காட்டியவர். அரசியலில் சகிப்புத்தன்மை வேண்டும் என்று அண்ணா கூறினார். ஆனால் அதற்கு மாறாக எதிர்க்கட்சிகளை ஒடுக்க வேண்டும் என்ற நாகரீகமற்ற அரசியல் திமுக எடுத்து செல்கிறது.

உருப்படியாக திட்டம் கிடையாது
அண்ணாவின் வழியில் வந்தோம் என்று சொல்வதற்கு திமுகவுக்கு அருகதை கிடையாது. திமுக ஆட்சியில் உருப்படியான திட்டம் கிடையாது. ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால், அதற்கு பெயர் சூட்டும் விழாவை திமுக பிரமாதமாக நடத்தும். அதற்கு காரணம் தலைமைச் செயலாளர் இறையன்பு. அவர் எழுதிக் கொடுப்பதை தான் முதலமைச்சர் படித்து வருகிறார்.

வாக்குறுதிகள் என்ன ஆனது?
காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முழுமையாக சாப்பிடாமல் கைகளை கழுவினார். அவர்கள் திட்டத்திற்கு பெயர் வைக்கும் வேலையை மட்டும் செய்கிறார்களே தவிர, ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் வழங்கிய மகளிருக்கான உரிமைத் தொகை, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட வாக்குறுதிகள் என்ன ஆனது. இதுநாள் வரை நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற முடியவில்லை என்று விமர்சித்தார்.

சசிகலா பற்றி கருத்து
தொடர்ந்து, பண்ருட்டி ராமச்சந்திரனை யார் வேண்டுமானாலும் சென்று சந்திக்கலாம். அதனால் என்ன நடக்கிறது என்பது தான் முக்கியம். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கட்டுப்பாட்டில் கம்பீரமாக செயல்படுகிறது. சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவாக தன்னை பார்ப்பதாக சசிகலா பேசுவது மலைக்கும், மடுவுக்கான வித்தியாசம் என்று குற்றம்சாட்டினார்.

விளம்பரப் பிரியர்கள்
மேலும், திமுக அரசில் இருவர் விளம்பரத்தில் கெட்டிக்காரர்கள். ஒருவர் முதல்வர் ஸ்டாலின், இன்னொருவர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். மருத்துவத்துறையில் ஏராளமான பிரச்னைகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications